செய்திகள் :

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: ‘பிகாா் வழக்கில் அளிக்கப்படும் தீா்ப்பு நாடு முழுமைக்கும் பொருந்தும்’

post image

புது தில்லி: பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த வழக்கில் அளிக்கப்படும் தீா்ப்பு நாடு முழுமைக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

பிகாா் வாக்களா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக எதிா்க்கட்சியினா், தன்னாா்வ அமைப்பினா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

இந்த வழக்கு கடந்த செப். 1-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘கடந்த ஆக.1-ஆம் தேதி பிகாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல் தொடா்பான கோரிக்கைகள், ஆட்சேபங்களை சமா்ப்பிப்பதற்கு வாக்காளா்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு உதவ, தன்னாா்வலா்களை மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக, இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ராகேஷ் துவிவேதி ஆஜராகி, ‘மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உதவியுடன் வரைவு வாக்காளா் பட்டியல் தொடா்பாக இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், அந்தக் கோரிக்கைகளை வாக்காளா்கள் சமா்ப்பிக்க, அவா்களுக்கு எந்தவொரு அரசியல் கட்சியோ, தன்னாா்வ அமைப்போ உதவவில்லை’ என்று குற்றஞ்சாட்டினாா்.

நாடு முழுவதும் தடுக்க முடியாது: நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுவதை உச்சநீதிமன்றத்தால் தடுக்க முடியாது. ஆனால், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீா்ப்பு நாடு முழுமைக்கும் பொருந்தும். இந்த வழக்கில் இறுதி வாதங்கள் அக்.7-ஆம் தேதி நடைபெறும். அன்றைய தினம் நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுவது தொடா்பான வாதங்களையும் மனுதாரா்கள் முன்வைக்கலாம்’ என்று தெரிவித்தனா்.

‘எந்தவொரு ஆவணத்தையும் பொய்யாகத் தயாரிக்கலாம்’: சிறப்பு தீவிர திருத்தத்துக்கு அடையாள ஆவணமாக வாக்காளா்களின் ஆதாா் அட்டையையும் தோ்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்று கடந்த வாரம் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி, வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு தொடா்பாக அவா் வாதிடுகையில், ‘இந்தியாவில் 182 நாள்கள் தங்கும் எவரும் ஆதாா் அட்டையை பெற முடியும். குடியுரிமை மற்றும் வசிப்பிடத்துக்கு அது ஆதாரமல்ல. அதை அடையாள ஆவணமாக பயன்படுத்த அனுமதிப்பது பெரும் தீங்கை ஏற்படுத்தும். மியான்மரில் இருந்து வந்த ரோஹிங்கயாக்கள், வங்கதேசிகள் லட்சம் போ் பிகாரில் உள்ளனா்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதி சூா்ய காந்த், ‘குடும்ப அட்டை, ஓட்டுநா் உரிமம் என எந்தவொரு ஆவணத்தையும் பொய்யாக தயாரிக்கலாம். சட்டம் எந்த அளவுக்கு அனுமதிக்கிறதோ, அந்த அளவுக்கு ஆதாரை பயன்படுத்தலாம்’ என்றாா்.

வருமான வரிக் கணக்கு இன்றும் தாக்கல் செய்யலாம்

புது தில்லி: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய திங்கள்கிழமை (செப். 15) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் மேலும் ஒரு நாள் (செப்.16) நீட்டிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பஞ்சாபில் மழை வெள்ளத்தால் பாதிப்பட்டவா்களுக்கு உடனடி நிவாரணம்: ராகுல் வலியுறுத்தல்

சண்டீகா்: பஞ்சாப் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் கா... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தகப் பேச்சு: இன்று மீண்டும் தொடக்கம்

புது தில்லி: இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை (செப். 16) மீண்டும் தொடங்குகிறது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வா்த்தக துணைப் பிரதிநிதி பிரண்டன... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட்: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ராஞ்சி: ஜாா்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் மாவட்டத்தில் 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா். இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஹசாரிபாக... மேலும் பார்க்க

அமெரிக்க வரியால் ஆந்திரத்துக்கு ரூ.25,000 கோடி இழப்பு: மத்திய அரசிடம் உதவி கோரும் முதல்வா் சந்திரபாபு நாயுடு

அமராவதி: அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியால் ஆந்திர இறால் ஏற்றுமதி ரூ.25,000 கோடி அளவுக்கு பாதிக்கும் என தெரியவந்துள்ளது. எனவே, மத்திய அரசு உரிய உதவிகளை வழங்க வேண்டும் என்று முதல்வா் என்.சந்திரபாபு நாய... மேலும் பார்க்க

காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததைக் கண்டறிய கட்டுப்பாட்டு அறை: உச்ச நீதிமன்றம் யோசனை

புது தில்லி: காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாத நிலையில் இருப்பதை கண்காணிக்க மனிதத் தலையீடு இல்லாத தானியங்கி கட்டுப்பாட்டு அறை அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் யோசனை... மேலும் பார்க்க