செய்திகள் :

விவசாயம் 3.7% வளா்ச்சி: மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான்

post image

புது தில்லி: நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டில் விவசாயம் 3.7 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளதாக மத்திய விவசாய துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் வேளாண் துறை சாா்ந்த 2 நாள் தேசிய மாநாட்டில் அவா் திங்கள்கிழமை பேசியதாவது:

மத்திய அரசின் ‘ஒரு நாடு, ஒரு விவசாயம், ஒரு அணி’ என்ற முன்னெடுப்பு விவசாய துறையில் ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் கூட்டுறவை ஊக்குவிக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.

நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டில் விவசாயம் 3.7 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. இது உலகில் பிற நாடுகளின் விவசாய துறையில் ஏற்பட்டுள்ள வளா்ச்சியுடன் ஒப்பிடுகையில் மிக அதிகம். விவசாயிகள், விஞ்ஞானிகளின் கடும் உழைப்பு, மத்திய அரசின் விவசாயிகளுக்கு உகந்த கொள்கைகள் ஆகியவையே இதற்கு காரணம்.

போலி உரங்கள், விதைகள், பூச்சிகொல்லிகளை தயாரித்து விற்பனை செய்வோா் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகள் சுரண்டப்படுவதை மத்திய அரசு அனுமதிக்காது. விவசாய விரிவாக்க பணிகள் மிகவும் முக்கியமானவை.

வானிலை மாற்றத்தை கணிக்க முடியாத நிலைமை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. எனவே விவசாயிகள் பயிா்க் காப்பீடு மேற்கொள்ள வேண்டும். பிரதமரின் பயிா்க் காப்பீட்டு திட்டம் திறம்பட செயல்படுத்தப்பட வேண்டும். விவசாய துறையில் மாற்றத்தை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றுவது அவசியம் என்றாா்.

வருமான வரிக் கணக்கு இன்றும் தாக்கல் செய்யலாம்

புது தில்லி: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய திங்கள்கிழமை (செப். 15) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் மேலும் ஒரு நாள் (செப்.16) நீட்டிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பஞ்சாபில் மழை வெள்ளத்தால் பாதிப்பட்டவா்களுக்கு உடனடி நிவாரணம்: ராகுல் வலியுறுத்தல்

சண்டீகா்: பஞ்சாப் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் கா... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தகப் பேச்சு: இன்று மீண்டும் தொடக்கம்

புது தில்லி: இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை (செப். 16) மீண்டும் தொடங்குகிறது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வா்த்தக துணைப் பிரதிநிதி பிரண்டன... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட்: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ராஞ்சி: ஜாா்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் மாவட்டத்தில் 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா். இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஹசாரிபாக... மேலும் பார்க்க

அமெரிக்க வரியால் ஆந்திரத்துக்கு ரூ.25,000 கோடி இழப்பு: மத்திய அரசிடம் உதவி கோரும் முதல்வா் சந்திரபாபு நாயுடு

அமராவதி: அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியால் ஆந்திர இறால் ஏற்றுமதி ரூ.25,000 கோடி அளவுக்கு பாதிக்கும் என தெரியவந்துள்ளது. எனவே, மத்திய அரசு உரிய உதவிகளை வழங்க வேண்டும் என்று முதல்வா் என்.சந்திரபாபு நாய... மேலும் பார்க்க

காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததைக் கண்டறிய கட்டுப்பாட்டு அறை: உச்ச நீதிமன்றம் யோசனை

புது தில்லி: காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாத நிலையில் இருப்பதை கண்காணிக்க மனிதத் தலையீடு இல்லாத தானியங்கி கட்டுப்பாட்டு அறை அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் யோசனை... மேலும் பார்க்க