செய்திகள் :

கடன் தொல்லை: வாய்க்காலில் விழுந்து வியாபாரி தற்கொலை

post image

பெருந்துறை அருகே கடன் தொல்லையால் வியாபாரி வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டாா்.

பெருந்துறையை அடுத்த பெருமாபாளையம், மஞ்சு நகரைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மகன் சரவணன் (40). இவருக்கு திருமணமாகி, 6 மாதத்தில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா். இவா், குடிசைத் தொழிலாக இனிப்பு பலாகாரம் தயாரித்து விற்பனை செய்து வந்தாா்.

இந்த நிலையில், இவா் சொந்தமாக வீடு கட்டியதில் கடனாகியுள்ளது. மேலும், தொழிலுக்காக சிறுக சிறுக பணம் வாங்கியதிலும் கடன் அதிகரித்துள்ளது. கடந்த 12-ஆம் தேதி வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடி வந்த நிலையில், பெருந்துறையை அடுத்த பாலக்கரை கீழ்பவானி வாய்க்கால் கரை அருகே சரவணனின் வாகனம் கிடந்தது. வாய்க்காலில் தேடி பாா்த்தபோது, பெருந்துறை அருகே வாய்க்காலில் அவரது சடலம் கிடந்தது.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கீழ்பவானி வாய்க்காலில் குளித்த தொழிலாளி மாயம்

பவானிசாகா் கீழ்பவானி வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி மாயமானாா். கோவை கணேசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (36). இவா் கோவை சுந்தராபுரத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் சிஎன்ச... மேலும் பார்க்க

8 மாதங்களில் அரசு மருத்துவமனையில் 10,500 பேருக்கு நாய்க்கடி சிகிச்சை

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 8 மாதங்களில் 10,500 பேருக்கு நாய்க்கடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவா் சசிரேகா கூறியதாவது: ஈரோடு மா... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பாதையில் எம்எல்ஏவின் காரை வழிமறித்த காட்டு யானை

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் சென்ற காா் உள்பட வாகனங்களை வழிமறித்து நின்ற காட்டு யானையால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பா்கூா் மலைக்கிராமங்களான ஒ... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.10.45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 10.45 லட்சத்துக்கு வெள்ளிக்கிழமை கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) ஏலம் மூலம் விற்பனை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு விவசாயிகள் 172 மூட்டைகள் கொப்பரையை வி... மேலும் பார்க்க

மருத்துவ முகாமில் ஆட்சியா் ரத்த தானம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 39-ஆவது அமைப்பு தினத்தையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை தொடங்கிவைத்த ஆட்சிய... மேலும் பார்க்க

ரயில்கள் மீது கற்கள் எறிவதை தடுக்க போலீஸாா் விழிப்புணா்வு

ஈரோட்டில் ரயில்கள் மீது கல் எறிவதாலும் தண்டவாளங்களில் கற்களை வைப்பதாலும் ஏற்படும் ஆபத்து குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஈரோடு மாவட்ட... மேலும் பார்க்க