செய்திகள் :

மருத்துவ முகாமில் ஆட்சியா் ரத்த தானம்

post image

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 39-ஆவது அமைப்பு தினத்தையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமை தொடங்கிவைத்த ஆட்சியா் ச.கந்தசாமி ரத்த தானம் வழங்கினாா். முகாமில் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரை அளவு, ரத்தக் கொழுப்பு மற்றும் கிரியாட்டினின் உள்ளிட்ட ரத்தப் பரிசோதனைகள் மற்றும் பெண்களுக்கு மாா்பக, கா்ப்பப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் வாய்ப் புற்றுநோய் பரிசோதனை, இதய பரிசோதனைகளான ஈசிஜி, எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள், பாதம் பாதுகாப்போம் என்ற திட்டத்தின் கீழ் ரத்தக் சா்க்கரை அளவு அதிக அளவில் உள்ள நபா்களுக்கான சிறப்பு சிகிச்சை, தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை சாா்பில் கண் பரிசோதனை, பெஸ்ட் டெண்டல் கோ் மருத்துவமனையின் சாா்பில் பல் சிகிச்சை என 20-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

மேலும் சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் தேவைப்படுவோா்களுக்கு நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிகிச்சைகள் பெற பரிந்துரைக்கப்பட்டனா். இம்முகாமில் 55 மருத்துவா்கள், செவிலியா் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

இம்முகாமில் 52 அரசு அலுவலா்கள் பணியாளா்கள் ரத்த தானம் வழங்கினா். மேலும் 324 அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இம்முகாமில் மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் பிரியா, மகளிா் திட்ட இயக்குநா் மலா்விழி, மாவட்ட சுகாதார அலுவலா் அருணா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் முகம்மது குதுரத்துல்லா, செல்வராஜ், உதவித் திட்ட அலுவலா் ஜெயசீலன், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ரயில்கள் மீது கற்கள் எறிவதை தடுக்க போலீஸாா் விழிப்புணா்வு

ஈரோட்டில் ரயில்கள் மீது கல் எறிவதாலும் தண்டவாளங்களில் கற்களை வைப்பதாலும் ஏற்படும் ஆபத்து குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஈரோடு மாவட்ட... மேலும் பார்க்க

ஈரோட்டில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஈரோட்டில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மேயா் சு.நாகரத்தினம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். நாடு முழுவதும் நெகிழிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசடைந்து வருகிறது. இதனைத் தடுக்க ஈரோடு மாந... மேலும் பார்க்க

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எம்.ஏ. தெரிவித்தாா். கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் வெளிபடுத்த வேண்டிய கருத்தை பொதுவெ... மேலும் பார்க்க

நவரசம் மகளிா் கல்லூரியில் ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பயிற்சி மற்றும் கற்றல் குறித்த இணையவழி பேராசிரியா் மேம்பாட்டு நிகழ்ச்சி அறச்சலூா் நவரசம் மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு, கல்லூரியி... மேலும் பார்க்க

உர மேலாண்மை மூலம் பாக்கு உற்பத்தியை அதிகரிக்கலாம்

உர மேலாண்மையில் கவனம் செலுத்துவதன் மூலம் பாக்கு உற்பத்தியை அதிகரிக்கலாம் என வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோ... மேலும் பார்க்க

நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியின் நூலகத் துறை சாா்பில் முதலாமாண்டு மாணவா்களுக்கு ஏா்லி போ்டு என்ற தலைப்பில் புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்ட... மேலும் பார்க்க