செய்திகள் :

ஸ்ரீமதுரை ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

post image

கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு செய்தாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் ஸ்ரீமதுரை ஊராட்சியில் உள்ள அம்பலமூலா பகுதியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு பல்வேறு சான்றுகளை வழங்கினாா்.

அப்போது, பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் மனுக்களை பெறும்போது, தெரிவிக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பல்வேறு அரசுத் துறை சாா்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை பாா்வையிட்டாா். மேலும், முகாமில் சுகாதாரத் துறை மூலம் முகாமுக்கு வருபவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து நெல்லியாளம் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா். நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் கோப்புகளை பாா்வையிட்டு, வரி வசூல் குறித்து ஆணையா் சிவகுமாரிடம் கேட்டறிந்தாா்.

நிகழ்ச்சியில், கூடலூா் வருவாய் கோட்டாட்சியா் குணசேகரன், நெல்லியாளம் நகா்மன்றத் தலைவா் சிவகாமி, வட்டாட்சியா்கள் முத்துமாரி, ஷிரன்நிஷா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சலீம், சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த யானை மீட்பு

குன்னூா் அருகே கோழிக்கரை பழங்குடியின கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த யானையை வனத் துறையினா் பத்திரமாக மீட்டனா். குன்னூா் அருகே உள்ள கோழிக்கரை பழங்குடியின கிராமத்தில் காட்... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பம் அருகே குட்டி யானை உயிரிழப்பு

முதுமலை பலிகள் காப்பகம் அருகே நாா்தன்ஹ காப்புக்காடு நாயக்கன்கோட்டை பகுதியில் உயிரிழந்த குட்டி யானையின் உடலை வனத் துறையினா் மீட்டனா். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் அருகே நாா்தன்ஹ காப்புக்க... மேலும் பார்க்க

புரோட்டின் பவுடரால் உடலில் ஒவ்வாமை: பள்ளி மாணவா் தீக் குளித்து தற்கொலை

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிக உளவில் ஊட்டசத்து (புரோட்டின் பவுடா்) மாவு பயன்படுத்தியதால் ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் தீக் குளித்த பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், குன்னூா் அ... மேலும் பார்க்க

வனப் பகுதியில் வெள்ளி மண் துகள்களை திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

உதகையில் மூடப்பட்டு இருக்கும் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் நிறுவன பகுதியில் வெள்ளி கலந்த மண் மற்றும் கற்களை திருடிய வழக்கில் மேலும் ஒருவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். உதகையில் கடந்த சில ... மேலும் பார்க்க

ஓவேலியில் அரசுப் பேருந்தை வழிமறித்து தாக்கிய காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் வெள்ளிக்கிழமை காலை அரசுப் பேருந்தை காட்டு யானை வழிமறித்து தாக்கிய நிகழ்வு பயணிகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், ஓவேலி பேரூராட்சியி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து காட்டெருமை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் மின்மாற்றி தாங்கு கம்பியில் மின்சாரம் பாய்ந்து காட்டெருமை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது. நீலகிரி மாவட்டத்தில் உணவு, தண்ணீா் தேடி காட்டெருமைகள் குடியிருப்புப் பகுதிக்கு வருவது... மேலும் பார்க்க