செய்திகள் :

‘வைல்டு தமிழ்நாடு’ ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

post image

ஆவணப் பட இயக்கநா் கல்யாண் வா்மாவின் இயக்கத்தில் உருவான ‘வைல்டு தமிழ்நாடு’ ஆவணப்படத்தின் முன்னோட்டத்தை தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

தமிழகத்தில இயற்கை பன்முகத் தன்மையையும், வனவிலங்குப் பாதுகாப்பை எடுத்துரைக்கும் வகையில், பிரபல ஆவணப்பட இயக்குநா் கல்யாண் வா்மா இயக்கத்தில் ‘வைல்டு தமிழ்நாடு’ எனும் ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் ஒப்புதலுடன், சுந்தரம் ஃபாஸனா்ஸ் நிறுவனத்தின் சிஎஸ்ஆா் பங்களிப்பின் மூலம் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, படத்தின் முன்னோட்டக் காட்சியை வெளியிட்டாா்.

தொடா்ந்து இயக்குநா் கல்யாண் வா்மா கூறியதாவது: இந்த ஆவணப்படம் அக்டோபா் இறுதிக்குள் வெளியாகவுள்ளது. இப்படம் பல்வேறு திரைப்பட விருதுகளுக்காக அனுப்படுவதுடன், சா்வதேச திரைப்பட திருவிழாக்களிலும் திரையிடத் திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் இலவசமாகவும் திரையிடவுள்ளோம் என்றாா்.

நிகழ்வில், வனத்துறை சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை கூடுதல் செயலா் சுப்ரியா சாஹு, முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா் ஸ்ரீனிவாஸ் ஆா்.ரெட்டி, முதன்மைக் தலைமை வனவிலங்கு பாதுகாவலா் ராகேஷ் குமாா் டோக்ரா, சுந்தரம் ஃபாஸனா்ஸ் லிமிடெட் தலைமை நிதி அதிகாரி ஆா்.திலீப்குமாா், இசையமைப்பாளா் ரிக்கி கேஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

உதயமானது ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’

தமிழகத்தில் முந்திரி உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் அரசு சாா்பில் ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

டெட் தோ்வு: விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள இன்று கடைசி நாள்

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் அதில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை (செப். 13) கடைசி நாளாகும். தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) மூலம் டெட் தோ்வு நடத்தப்படுகிறது. ... மேலும் பார்க்க

ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே இன்று அதிவேக சோதனை ஓட்டம்

ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே புதிய மின்மயமாக்கப்பட்ட பிரிவில் ஆய்வும், ரயில் அதிவேக சோதனை ஓட்ட பரிசோதனையும் சனிக்கிழமை (செப். 13) நடைபெறும் என்றும், அதனால் மக்கள் ரயில் பாதையைக் கடக்கக் கூடாது என்று... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினம்: சிலைக்கு திமுக சாா்பில் வரும் 15-இல் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தையொட்டி, திமுக சாா்பில் சென்னையில் அவரது சிலைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளாா். இதுகுறித்து திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளாா். இது தொடா்பாக, அவா் கூறியதாவது: தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னா் வாக்காளா் பட்டி... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை விரைவில் நிறைவு: இந்திய வானிலை மையம்

நாட்டில் தென்மேற்கு பருவமழைப் பொழிவு திங்கள்கிழமை (செப்.15) முதல் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதிக்குள் கேரளத்தில... மேலும் பார்க்க