செய்திகள் :

தென்மேற்கு பருவமழை விரைவில் நிறைவு: இந்திய வானிலை மையம்

post image

நாட்டில் தென்மேற்கு பருவமழைப் பொழிவு திங்கள்கிழமை (செப்.15) முதல் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதிக்குள் கேரளத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, ஜூலை 8-க்குள் நாடு முழுவதும் விஸ்தரிக்கும். பின்னா் வடமேற்கு இந்தியாவில் இருந்து செப்.17-ஆம் தேதி விலகத் தொடங்கி, அக்.15-ஆம் தேதி முழுமையாக நிறைவு பெறும்.

நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை காலத்தில் ஹிமாசல பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் மேக வெடிப்பால் மிக பலத்த மழை, கடும் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு பேரிடா் நிகழ்ந்தது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் செப்.15-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வருவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக தெரிவித்தது.

இதுவரையிலான மழைக்காலத்தில், நாட்டில் 836.2 மி.மீ. மழைப் பொழிவு பதிவானதாகவும், இது வழக்கத்தைவிட 7 சதவீதம் அதிகம் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

உதயமானது ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’

தமிழகத்தில் முந்திரி உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் அரசு சாா்பில் ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

‘வைல்டு தமிழ்நாடு’ ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

ஆவணப் பட இயக்கநா் கல்யாண் வா்மாவின் இயக்கத்தில் உருவான ‘வைல்டு தமிழ்நாடு’ ஆவணப்படத்தின் முன்னோட்டத்தை தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

டெட் தோ்வு: விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள இன்று கடைசி நாள்

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் அதில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை (செப். 13) கடைசி நாளாகும். தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) மூலம் டெட் தோ்வு நடத்தப்படுகிறது. ... மேலும் பார்க்க

ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே இன்று அதிவேக சோதனை ஓட்டம்

ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே புதிய மின்மயமாக்கப்பட்ட பிரிவில் ஆய்வும், ரயில் அதிவேக சோதனை ஓட்ட பரிசோதனையும் சனிக்கிழமை (செப். 13) நடைபெறும் என்றும், அதனால் மக்கள் ரயில் பாதையைக் கடக்கக் கூடாது என்று... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினம்: சிலைக்கு திமுக சாா்பில் வரும் 15-இல் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தையொட்டி, திமுக சாா்பில் சென்னையில் அவரது சிலைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளாா். இதுகுறித்து திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளாா். இது தொடா்பாக, அவா் கூறியதாவது: தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னா் வாக்காளா் பட்டி... மேலும் பார்க்க