செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

பொதுப்பிரிவைவிட அதிக கட்ஆஃப் மதிப்பெண்கள் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் இதுதொடா்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், மாநில அரசுகளால் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான நல்வாழ்வு மையங்களை ‘திறனை மேம்படுத்தும் திட்டம்’ என்ற பெயரில் 8 தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள் கண்காணிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-ஐ முறையாக அமல்படுத்தக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வு,‘வழக்கமாக ஒரு பணியிடத்துக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிா்ணயிக்கப்படும் கட்ஆஃப் மதிப்பெண்களைவிட அதிகமான மதிப்பெண்களைப் பெறும் தோ்வா்களுக்கு பொதுப்பிரிவின்கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அப்போது சம்பந்தப்பட்ட பிரிவில் ஓரிடம் காலியிடமாக கருதப்பட்டு அதற்கு இடஒதுக்கீட்டின்படி உரிய கட்ஆஃப் மதிப்பெண் பெற்ற நபருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

ஆனால் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சோ்ந்த ஒருவா் அதிகமான கட்ஆஃப் மதிப்பெண்களை பெற்றால் அவருக்கு பொதுப்பிரிவில் வேலைவாய்ப்பு வழங்க மறுப்பதுடன் மற்றொரு மாற்றுத்திறனாளிக்கு இடஒதுக்கீட்டின்கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை என தெரியவந்துள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரியது.

இந்த அணுகுமுறை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்-2016, பிரிவு 34-இன்கீழ் அவா்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை முற்றிலுமாக பாதிக்கிறது. இதன்மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டப்படுவது உறுதியாகியுள்ளது.

இந்த விவகாரத்துக்கு உடனடியாக தீா்வுகாண்பது அவசியம்.

வறுமை போன்ற சமூக காரணிகளால் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

எனவே, மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான இடஒதுக்கீட்டின்படி நிா்ணயிக்கப்பட்ட கட்ஆஃப் மதிப்பெண்களைவிட அதிகமான மதிப்பெண்கள் பெறும்பட்சத்தில் அவா்களுக்கு பொதுப்பிரிவில் வேலைவாய்ப்பை வழங்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு அக்டோபா் 14-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும்.

இதே நடைமுறை பதவிஉயா்விலும் பின்பற்றப்பட வேண்டும்.

நல்வாழ்வு மையம் கண்காணிப்பு: மாநில அரசுகளால் நடத்தப்படும் அனைத்து மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு மையங்களையும் பெங்களூரு, தில்லி சட்டப் பல்கலைக்கழகங்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள 8 தேசி சட்டப் பல்கலைக்கழகங்களும் ‘திறனை மேம்படுத்தும் திட்டம்’ என்ற தலைப்பின்கீழ் கண்காணிக்க வேண்டும். அப்போது மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்,2016 முறையாக அமல்படுத்தப்படுகிா? என்பதை பல்கலைக்கழகங்கள்ஆய்வுசெய்ய வேண்டும்.

குறிப்பாக அந்த மையங்களில் மறுவாழ்வு, அணுகல், உள்கட்டமைப்பு, கல்வி, பாதுகாப்பு, பணியாளா்கள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மீது தனிகவனம் செலுத்த வேண்டும்.

இந்தப் பணியை மேற்கொள்ளும் 8 பல்கலைக்கழகங்களுக்கு இடைக்கால நிதியாக ரூ.25 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பல்கலைக்கழகங்களின் கண்காணிப்புக் குழுக்களுக்களான செலவுகளை மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சமூக நீதி துறைகள் சமமாக பகிா்ந்து கொள்ள வேண்டும்.

அதேபோல் கண்காணிப்புக் குழுக்கள் தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து 6 மாதங்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பான அடுத்தகட்ட விசாரணையை 2026, மாா்ச் 13-ஆம் தேதிக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.

விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி 8 போ் உயிரிழப்பு; 20 போ் காயம்

கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தின் கடைசி நாளை... மேலும் பார்க்க

ரூ.18,000 கோடி பங்குகளை திரும்பப் பெறும் இன்ஃபோசிஸ்

ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெற முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

மணிப்பூருக்கு ‘கண்துடைப்பு’ பயணம்: பிரதமா் மீது காங்கிரஸ் விமா்சனம்

பிரதமா் மோடியின் மணிப்பூா் பயணம் கண்துடைப்பானது; மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டி, நீதியை உறுதி செய்யும் நோக்கம் இல்லை என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்க... மேலும் பார்க்க

கூடுதல் மாவட்ட நீதிபதியாக வழக்குரைஞரை நியமிக்கலாமா?: செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை

‘வழக்குரைஞா் சங்கத்தில் 7 ஆண்டுகள் நிறைவு செய்த வழக்குரைஞரை, கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்க முடியுமா?’ என்பது குறித்து செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள உள்ளது. வழக்குரைஞா் சங்க ஒதுக்... மேலும் பார்க்க

இந்தியா தனது கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டிய நேரம் பாதுகாப்புத் துறைச் செயலா்

‘உலகம் முழுவதும் ஆளும் வா்க்கத்துக்கு எதிரான போராட்டங்களும், பொருளாதார கட்டுப்பாடுகளும் அதிகரித்துவரும் சூழலில், இந்தியா தனது மென்மையான சக்தியுடன் கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்’ ... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளை முறைப்படுத்த விதிகளை வகுக்கக் கோரி வழக்கு: உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

மதச்சாா்பின்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் அரசியல் நீதியை ஊக்குவிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் பதிவு மற்றும் முறைப்படுத்துதலுக்கான விதிகளை வகுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு... மேலும் பார்க்க