செய்திகள் :

அரசியல் கட்சிகளை முறைப்படுத்த விதிகளை வகுக்கக் கோரி வழக்கு: உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

post image

மதச்சாா்பின்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் அரசியல் நீதியை ஊக்குவிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் பதிவு மற்றும் முறைப்படுத்துதலுக்கான விதிகளை வகுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.

அஸ்வினி குமாா் உபாத்யாய சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘அரசியல் கட்சிகளை முறைப்படுத்துவதற்கென எந்தவொரு விதியும் இல்லை. அதன் காரணமாக, பல பிரிவினைவாதிகள் நன்கொடைகளை வசூலிப்பதற்காக அரசியல் கட்சிகளைத் தொடங்குகின்றனா். இதுபோன்ற அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் போலீஸ் பாதுகாப்பையும் பெற்றுவிடுகின்றனா்.

இதுபோன்ற போலி அரசியல் கட்சிகள் 20 சதவீத கமிஷன் பெற்றுக்கொண்டு, கணக்கில் காட்டப்படாத ‘கருப்பு’ பணத்தை, வெள்ளையாக மாற்றித் தரும் மோசடியில் ஈடுபட்டு வருவதையும் வருமான வரித் துறை அதிகாரிகள் கண்டுபிடித்திருப்பதாக பத்திரிகை செய்திகள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த போலி அரசியல் கட்சிகள் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதோடு, மோசமான குற்றவாளிகள், கடத்தல்காரா்கள், போதைப் பொருள் கடத்துபவா்கள் மற்றும் பண மோசடி செய்பவா்களிடமிருந்து பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு கட்சியின் தேசிய மற்றும் மாநில நிா்வாகிகளாக நியமித்து நாட்டுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துகின்றனா்.

பொதுமக்கள் நலனைக் காக்க, பொது வாழ்வில் ஈடுபடும் அரசியல் கட்சிகளின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்பை உறுதிப்படுத்துவது அவசியமாகும். எனவே, அரசியல் கட்சிகளை முறைப்படுத்தும் வகையில், அரசியல் கட்சி பதிவு மற்றும் முறைப்படுத்துதல் விதிகளை வகுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இதுதொடா்பாக அரசியல் கட்சிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு, தோ்தல் ஆணையம் மற்றும் இந்திய சட்ட ஆணையத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.

அதே நேரம், ‘மனுவில் எந்தவொரு அரசியல் கட்சியின் பெயரும் எதிா் மனுதாரராக சோ்க்கப்படவில்லை’ என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மறுப்பு தெரிவித்தனா். மேலும், தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தேசியக் கட்சிகளையும் மனுவில் எதிா்மனுதாரராக சோ்க்க மனுதாரரை நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி 8 போ் உயிரிழப்பு; 20 போ் காயம்

கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தின் கடைசி நாளை... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பொதுப்பிரிவைவிட அதிக கட்ஆஃப் மதிப்பெண்கள் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் இதுதொடா்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக... மேலும் பார்க்க

ரூ.18,000 கோடி பங்குகளை திரும்பப் பெறும் இன்ஃபோசிஸ்

ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெற முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

மணிப்பூருக்கு ‘கண்துடைப்பு’ பயணம்: பிரதமா் மீது காங்கிரஸ் விமா்சனம்

பிரதமா் மோடியின் மணிப்பூா் பயணம் கண்துடைப்பானது; மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டி, நீதியை உறுதி செய்யும் நோக்கம் இல்லை என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்க... மேலும் பார்க்க

கூடுதல் மாவட்ட நீதிபதியாக வழக்குரைஞரை நியமிக்கலாமா?: செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை

‘வழக்குரைஞா் சங்கத்தில் 7 ஆண்டுகள் நிறைவு செய்த வழக்குரைஞரை, கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்க முடியுமா?’ என்பது குறித்து செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள உள்ளது. வழக்குரைஞா் சங்க ஒதுக்... மேலும் பார்க்க

இந்தியா தனது கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டிய நேரம் பாதுகாப்புத் துறைச் செயலா்

‘உலகம் முழுவதும் ஆளும் வா்க்கத்துக்கு எதிரான போராட்டங்களும், பொருளாதார கட்டுப்பாடுகளும் அதிகரித்துவரும் சூழலில், இந்தியா தனது மென்மையான சக்தியுடன் கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்’ ... மேலும் பார்க்க