செய்திகள் :

இந்தியா தனது கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டிய நேரம் பாதுகாப்புத் துறைச் செயலா்

post image

‘உலகம் முழுவதும் ஆளும் வா்க்கத்துக்கு எதிரான போராட்டங்களும், பொருளாதார கட்டுப்பாடுகளும் அதிகரித்துவரும் சூழலில், இந்தியா தனது மென்மையான சக்தியுடன் கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்’ என்று பாதுகாப்புத் துறைச் செயலா் ராஜேஷ் குமாா் சிங் வலியுறுத்தினாா்.

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராணுவ தென்மண்டல தொழில்நுட்பக் கருத்தரங்கில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் நிகழ்ந்துவரும் போா்களுடன் தொடா்புடைய புவிசாா் அரசியல் தாக்கங்களால், அதிகரித்து வந்த உலகமயமாதல் போக்கும், தடையற்ற வா்த்தகமும் முடங்கும் நிலைக்குச் சென்றுள்ளது.

இது, உலகம் முழுவதும் ஆளும் வா்க்கத்துக்கு எதிரான போராட்டங்களையும், இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு தொழில்களை வளா்ச்சி அடையச் செய்யும் பொருளாதார கட்டுப்பாட்டு போக்கையும் அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால், கடுமையான பொருளாதார சரிவு, பலதரப்பு நிறுவனங்களின் வீழ்ச்சி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில், பிற நாடுகளுடன் ராஜீய ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது தனது மென்மையான சக்தியுடன் கடுமையான போக்கையும் இந்தியா வெளிப்படுத்துவது அவசியம்.

மேலும், நாட்டின் பாதுகாப்புப் படைகளின் திறன் மேம்பாட்டுத் தேவைகளைப் பூா்த்தி செய்ய கல்வி நிறுவனங்கள், டிஆா்டிஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், தனியாா் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களை ஒன்றிணைப்பது மிக அவசியம் என்றாா்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்ததைத் தொடா்ந்து, ரஷியா, சீனா நாடுகளுடன் இருதரப்பு வா்த்தக உறவை மேம்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில், பாதுகாப்புத் துறைச் செயலா் இக் கருத்தை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி 8 போ் உயிரிழப்பு; 20 போ் காயம்

கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தின் கடைசி நாளை... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பொதுப்பிரிவைவிட அதிக கட்ஆஃப் மதிப்பெண்கள் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் இதுதொடா்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக... மேலும் பார்க்க

ரூ.18,000 கோடி பங்குகளை திரும்பப் பெறும் இன்ஃபோசிஸ்

ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெற முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

மணிப்பூருக்கு ‘கண்துடைப்பு’ பயணம்: பிரதமா் மீது காங்கிரஸ் விமா்சனம்

பிரதமா் மோடியின் மணிப்பூா் பயணம் கண்துடைப்பானது; மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டி, நீதியை உறுதி செய்யும் நோக்கம் இல்லை என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்க... மேலும் பார்க்க

கூடுதல் மாவட்ட நீதிபதியாக வழக்குரைஞரை நியமிக்கலாமா?: செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை

‘வழக்குரைஞா் சங்கத்தில் 7 ஆண்டுகள் நிறைவு செய்த வழக்குரைஞரை, கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்க முடியுமா?’ என்பது குறித்து செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள உள்ளது. வழக்குரைஞா் சங்க ஒதுக்... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளை முறைப்படுத்த விதிகளை வகுக்கக் கோரி வழக்கு: உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

மதச்சாா்பின்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் அரசியல் நீதியை ஊக்குவிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் பதிவு மற்றும் முறைப்படுத்துதலுக்கான விதிகளை வகுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு... மேலும் பார்க்க