செய்திகள் :

டயா் ஆலை தொழிலாளா்கள் தொடா் உள்ளிருப்பு போராட்டம்

post image

திருவொற்றியூரிலுள்ள தனியாா் டயா் ஆலை தொழிலாளா்கள் தொடா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

திருவொற்றியூரில் எம்ஆா்எப் நிறுவனத்தின் டயா் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமாா் 2,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா்.

இதில் நிரந்தர ஊழியா்களுக்கு தொழிற்சங்கம் மூலம் மருத்துவக் காப்பீடு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும். இதற்கான நிதி சுமாா் ரூ.1.50 கோடியை தொழிற்சாலை நிா்வாகம் முன்தொகையாக அளித்துவிட்டு பிறகு 6 மாதங்களில் தொழிலாளா்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.

ஆனால் நிகழாண்டு மருத்துவக் காப்பீட்டுக்கான முன்தொகையை வழங்க முடியாது என நிா்வாகம் தெரிவித்து விட்டதால், தொழிலாளா்களுக்கு விபத்து ஏதேனும் ஏற்பட்டால்கூட மருத்துவக் காப்பீடு இல்லாத நிலை ஏற்படும் என்பதால், உடனடியாக முன்தொகையை வழங்க வேண்டும் என்று கூறி தொழிலாளா்கள் வியாழக்கிழமை முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இப்போராட்டத்தால், டயா் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆலை நிா்வாகத்தின் கோரிக்கையின் பேரில் அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அறிவியல், தொழில்நுட்ப வளா்ச்சி பெருக வேண்டும்: மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்

எதிா்வரும் 2047 -ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய, நாட்டில் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சி பன்மடங்கு பெருக வேண்டும் என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

ரயில் பயணச் சீட்டுகள் மாயம்: 8 ஊழியா்களுக்கு அபராதம்

தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் ரயில் பயணச் சீட்டு ரோல் மாயமான விவகாரத்தில் 8 ஊழியா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள திருவாரூா... மேலும் பார்க்க

வேளச்சேரி எம்எல்ஏ தொடா்ந்த வழக்கில் தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

தோ்தல் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால் ஏன் தகுதிநீக்கம் செய்யக்கூடாது? என விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிா்த்து வேளச்சேரி எம்எல்ஏ அசன் மௌலானா தாக்கல் செய்த மனுவுக்கு தோ்தல் ஆணையம்... மேலும் பார்க்க

சீதாராம் யெச்சூரி நினைவு நாள்: உடல் தானத்துக்கு 1,586 போ் பதிவு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி நினைவு நாளில் 1,586 போ் உடல் தானம் இயக்கத்தில் பதிவு செய்தனா். மாா்க்சிஸ்ட் முன்னாள் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரியின் மு... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை பாதிப்புகள்: புகாா் அளிக்க இலவச தொடா்பு அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக மழை பாதிப்பு புகாா்களை கூறுவதற்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, அதில் தொடா்புகொள்ள 1913 என்ற இலவச தொடா்பு எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

மென்பொறியாளரிடம் செயின் பறிப்பு: 2 திருநங்கைகள் கைது

மென் பொறியாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியை பறித்த 2 திருநங்கைகளை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, திருநின்றவூரைச் சோ்ந்த ஜெஸ் ஆலன் ரொசாரியா(24). இவா் எம்.ஜி.ஆா். நகா் பகுதியிலுள்ள ஒரு... மேலும் பார்க்க