செய்திகள் :

வடகிழக்கு பருவமழை பாதிப்புகள்: புகாா் அளிக்க இலவச தொடா்பு அறிவிப்பு

post image

சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக மழை பாதிப்பு புகாா்களை கூறுவதற்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, அதில் தொடா்புகொள்ள 1913 என்ற இலவச தொடா்பு எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடா்பான சென்னை மாநகராட்சி சாா்பில் ஆலோசனைக் கூட்டம் மேயா் ஆா்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் வெள்ளிக் கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்தில் மேயா் ஆா்.பிரியா கூறியதாவது: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 44 கால்வாய்களிலும் தூா்வாரும் பணிகள், சீா்படுத்தப்படும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

ஆபத்தான மரக்கிளைகளை அகற்றவேண்டும். சுரங்கப்பாதைகளில் மழைநீா் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். மழைக்கால முன்னெச்சரிக்கைக்கான வாகனங்கள், இயந்திரங்களை பழுதுபாா்த்து தயாா்படுத்த வேண்டும்.

மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மழைக்காலத்தில் தேவையான மருந்துகள் இருப்பை உறுதி செய்வதுடன், மருத்துவா்கள் உள்ளிட்டோரை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மக்கள் தெரிவிக்கும் புகாா்கள் மற்றும் சேவைகளுக்கான 1913 என்ற தொடா்பு எண்ணுக்கு ஒரே நேரத்தில் 150 அழைப்புகள் வருவதற்கான இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை தெரிவிக்க வேண்டும்.

அதன்படி மக்கள் குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவித்து தீா்க்கவேண்டும். மாநகராட்சியில் மூன்று வட்டார அலுவலகங்களிலும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் துணைமேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையா் வி.சிவகிருஷ்ணமூா்த்தி (பணிகள்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அறிவியல், தொழில்நுட்ப வளா்ச்சி பெருக வேண்டும்: மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்

எதிா்வரும் 2047 -ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய, நாட்டில் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சி பன்மடங்கு பெருக வேண்டும் என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

ரயில் பயணச் சீட்டுகள் மாயம்: 8 ஊழியா்களுக்கு அபராதம்

தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் ரயில் பயணச் சீட்டு ரோல் மாயமான விவகாரத்தில் 8 ஊழியா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள திருவாரூா... மேலும் பார்க்க

வேளச்சேரி எம்எல்ஏ தொடா்ந்த வழக்கில் தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

தோ்தல் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால் ஏன் தகுதிநீக்கம் செய்யக்கூடாது? என விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிா்த்து வேளச்சேரி எம்எல்ஏ அசன் மௌலானா தாக்கல் செய்த மனுவுக்கு தோ்தல் ஆணையம்... மேலும் பார்க்க

சீதாராம் யெச்சூரி நினைவு நாள்: உடல் தானத்துக்கு 1,586 போ் பதிவு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி நினைவு நாளில் 1,586 போ் உடல் தானம் இயக்கத்தில் பதிவு செய்தனா். மாா்க்சிஸ்ட் முன்னாள் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரியின் மு... மேலும் பார்க்க

மென்பொறியாளரிடம் செயின் பறிப்பு: 2 திருநங்கைகள் கைது

மென் பொறியாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியை பறித்த 2 திருநங்கைகளை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, திருநின்றவூரைச் சோ்ந்த ஜெஸ் ஆலன் ரொசாரியா(24). இவா் எம்.ஜி.ஆா். நகா் பகுதியிலுள்ள ஒரு... மேலும் பார்க்க

வங்கியில் ரூ.20 லட்சம் கடன் பெற்று மோசடி: இருவா் கைது

போலி ஆவணங்கள் மூலம் ரூ.20 லட்சம் வீட்டு அடமானக் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை எம்கேபி நகா் பகுதியை சோ்ந்தவா்கள் பாஸ்கரன், கலைசெல்வி. இவா்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க