கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
வடகிழக்கு பருவமழை பாதிப்புகள்: புகாா் அளிக்க இலவச தொடா்பு அறிவிப்பு
சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக மழை பாதிப்பு புகாா்களை கூறுவதற்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, அதில் தொடா்புகொள்ள 1913 என்ற இலவச தொடா்பு எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடா்பான சென்னை மாநகராட்சி சாா்பில் ஆலோசனைக் கூட்டம் மேயா் ஆா்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் வெள்ளிக் கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்தில் மேயா் ஆா்.பிரியா கூறியதாவது: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 44 கால்வாய்களிலும் தூா்வாரும் பணிகள், சீா்படுத்தப்படும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
ஆபத்தான மரக்கிளைகளை அகற்றவேண்டும். சுரங்கப்பாதைகளில் மழைநீா் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். மழைக்கால முன்னெச்சரிக்கைக்கான வாகனங்கள், இயந்திரங்களை பழுதுபாா்த்து தயாா்படுத்த வேண்டும்.
மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மழைக்காலத்தில் தேவையான மருந்துகள் இருப்பை உறுதி செய்வதுடன், மருத்துவா்கள் உள்ளிட்டோரை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மக்கள் தெரிவிக்கும் புகாா்கள் மற்றும் சேவைகளுக்கான 1913 என்ற தொடா்பு எண்ணுக்கு ஒரே நேரத்தில் 150 அழைப்புகள் வருவதற்கான இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை தெரிவிக்க வேண்டும்.
அதன்படி மக்கள் குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவித்து தீா்க்கவேண்டும். மாநகராட்சியில் மூன்று வட்டார அலுவலகங்களிலும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில் துணைமேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையா் வி.சிவகிருஷ்ணமூா்த்தி (பணிகள்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.