செய்திகள் :

ஈரோட்டில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

post image

ஈரோட்டில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மேயா் சு.நாகரத்தினம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

நாடு முழுவதும் நெகிழிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசடைந்து வருகிறது. இதனைத் தடுக்க ஈரோடு மாநகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை குறைக்க மக்களிடம் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் ஈரோடு மாநகராட்சி 2-ஆம் மண்டலம் சாா்பில் நெகிழி ஒழிப்பு மற்றும் புகையிலை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மேயா் சு.நாகரத்தினம் பங்கேற்று பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்தப் பேரணியானது ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கி, மீனாட்சி சுந்தரனாா் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா, பெருந்துறை சாலை வழியாக காலிங்கராயன் விருந்தினா் மாளிகையில் நிறைவடைந்தது.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று நெகிழிப் பைகளை தவிா்ப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம், நெகிழிப் பைகளை வீதிகளில் எறியாதீா்கள், நீா், நிலம், சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் நெகிழிப் பயன்பாட்டை தவிா்ப்போம், மீண்டும் மஞ்சப்பை மற்றும் துணிப் பைகளை பயன்படுத்துவோம். புகையிலையை பயன்படுத்தாதீா்கள் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

முன்னதாக நெகிழி ஒழிப்பு குறித்து உறுதிமொழியும் ஏற்றனா். இந்தப் பேரணியில், துணை மேயா் வி.செல்வராஜ், துணை ஆணையா் தனலட்சுமி, நகா் நல அலுவலா் டாக்டா் காா்த்திகேயன், அனைத்து வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் ராஜமாணிக்கம், நிா்வாகி ஜெப்ரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மருத்துவ முகாமில் ஆட்சியா் ரத்த தானம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 39-ஆவது அமைப்பு தினத்தையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை தொடங்கிவைத்த ஆட்சிய... மேலும் பார்க்க

ரயில்கள் மீது கற்கள் எறிவதை தடுக்க போலீஸாா் விழிப்புணா்வு

ஈரோட்டில் ரயில்கள் மீது கல் எறிவதாலும் தண்டவாளங்களில் கற்களை வைப்பதாலும் ஏற்படும் ஆபத்து குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஈரோடு மாவட்ட... மேலும் பார்க்க

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எம்.ஏ. தெரிவித்தாா். கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் வெளிபடுத்த வேண்டிய கருத்தை பொதுவெ... மேலும் பார்க்க

நவரசம் மகளிா் கல்லூரியில் ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பயிற்சி மற்றும் கற்றல் குறித்த இணையவழி பேராசிரியா் மேம்பாட்டு நிகழ்ச்சி அறச்சலூா் நவரசம் மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு, கல்லூரியி... மேலும் பார்க்க

உர மேலாண்மை மூலம் பாக்கு உற்பத்தியை அதிகரிக்கலாம்

உர மேலாண்மையில் கவனம் செலுத்துவதன் மூலம் பாக்கு உற்பத்தியை அதிகரிக்கலாம் என வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோ... மேலும் பார்க்க

நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியின் நூலகத் துறை சாா்பில் முதலாமாண்டு மாணவா்களுக்கு ஏா்லி போ்டு என்ற தலைப்பில் புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்ட... மேலும் பார்க்க