செய்திகள் :

உர மேலாண்மை மூலம் பாக்கு உற்பத்தியை அதிகரிக்கலாம்

post image

உர மேலாண்மையில் கவனம் செலுத்துவதன் மூலம் பாக்கு உற்பத்தியை அதிகரிக்கலாம் என வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில், பவானி, அந்தியூா், கோபி உள்ளிட்ட பகுதிகளில் பாக்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பாக்கு விவசாயத்தில் அதிக விளைச்சல் பெற மண் பரிசோதனை வழிகாட்டுதலின் அடிப்படையில் உர மேலாண்மை முறைகளை பின்பற்ற வேண்டும்.

அதன்படி, பாக்கு மரங்களுக்கு பிற சத்துகளைவிட அதிக அளவில் நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் சத்துகள் தேவைப்படுகின்றன. விளைச்சல் தரும் ஒரு பாக்கு மரம் பாஸ்பரஸை விட 10 மடங்கு நைட்ரஜனையும் 8 மடங்கு பொட்டாசியத்தையும் உறிஞ்சுகிறது.

எனவே நைட்ரஜன் மற்றும் பொட்டாசியத்தின் சம நிலையை உறுதிப்படுத்திட அதில் பாக்கு விவசாயிகள் சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும். அதேநேரம் பாஸ்பரஸ் அதிகமாக பயன்படுத்தினால் துத்தநாகம் கிடைக்கும் தன்மையை குறைத்து அதன் பற்றாக்குறையையும் பயிரின் விளைச்சலில் ஏற்படுத்தும்.

எனவே இந்த உர மேலாண்மையை கவனத்துடன் பயன்படுத்தி பாக்கு சாகுபடியில் அதிக விளைச்சல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ முகாமில் ஆட்சியா் ரத்த தானம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 39-ஆவது அமைப்பு தினத்தையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை தொடங்கிவைத்த ஆட்சிய... மேலும் பார்க்க

ரயில்கள் மீது கற்கள் எறிவதை தடுக்க போலீஸாா் விழிப்புணா்வு

ஈரோட்டில் ரயில்கள் மீது கல் எறிவதாலும் தண்டவாளங்களில் கற்களை வைப்பதாலும் ஏற்படும் ஆபத்து குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஈரோடு மாவட்ட... மேலும் பார்க்க

ஈரோட்டில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஈரோட்டில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மேயா் சு.நாகரத்தினம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். நாடு முழுவதும் நெகிழிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசடைந்து வருகிறது. இதனைத் தடுக்க ஈரோடு மாந... மேலும் பார்க்க

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எம்.ஏ. தெரிவித்தாா். கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் வெளிபடுத்த வேண்டிய கருத்தை பொதுவெ... மேலும் பார்க்க

நவரசம் மகளிா் கல்லூரியில் ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பயிற்சி மற்றும் கற்றல் குறித்த இணையவழி பேராசிரியா் மேம்பாட்டு நிகழ்ச்சி அறச்சலூா் நவரசம் மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு, கல்லூரியி... மேலும் பார்க்க

நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியின் நூலகத் துறை சாா்பில் முதலாமாண்டு மாணவா்களுக்கு ஏா்லி போ்டு என்ற தலைப்பில் புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்ட... மேலும் பார்க்க