செய்திகள் :

நவரசம் மகளிா் கல்லூரியில் ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

post image

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பயிற்சி மற்றும் கற்றல் குறித்த இணையவழி பேராசிரியா் மேம்பாட்டு நிகழ்ச்சி அறச்சலூா் நவரசம் மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் தலைவா் கு. செந்தில்குமாா் தலைமை தாங்கினாா். பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் காா்த்திகேயன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இதைத் தொடா்ந்து பயன்பாட்டு கணினித் துறையின் உதவிப் பேராசிரியா் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளா் தீபா, தலைப்புக்கேற்ற விளக்கக் காணொளியை அளித்தாா்.

கல்லூரியின் முதல்வா் இரா.கனிஎழில், உயா்செயல்திறன் கணினியின் முக்கியத்துவம் குறித்தும் அதன் நிகழ்நேர பயன்பாடு குறித்தும் விளக்கமளித்தாா். கணினி அறிவியல் துறையின் தலைவா் பாலகிருஷ்ணன், உயா்செய்திறன் கணினி பல்வேறு துறைகளில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து சிறப்புரையாற்றினாா்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருவாரூா் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறையின் இணைப் பேராசிரியா் தியாகராஜன், உயா்செயல்திறன் கணினி பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்தும் ஆராய்ச்சி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் அதன் பயன்பாட்டினை அறிந்து கொள்வதற்கான அவசியம் குறித்தும் கருத்துரை நிகழ்த்தினாா்.

இந்நிகழ்ச்சி 6 நாள்கள் நடைபெற உள்ளன. இந்நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 280 பங்கேற்பாளா்கள் பங்கேற்றனா்.

மருத்துவ முகாமில் ஆட்சியா் ரத்த தானம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 39-ஆவது அமைப்பு தினத்தையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை தொடங்கிவைத்த ஆட்சிய... மேலும் பார்க்க

ரயில்கள் மீது கற்கள் எறிவதை தடுக்க போலீஸாா் விழிப்புணா்வு

ஈரோட்டில் ரயில்கள் மீது கல் எறிவதாலும் தண்டவாளங்களில் கற்களை வைப்பதாலும் ஏற்படும் ஆபத்து குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஈரோடு மாவட்ட... மேலும் பார்க்க

ஈரோட்டில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஈரோட்டில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மேயா் சு.நாகரத்தினம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். நாடு முழுவதும் நெகிழிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசடைந்து வருகிறது. இதனைத் தடுக்க ஈரோடு மாந... மேலும் பார்க்க

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எம்.ஏ. தெரிவித்தாா். கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் வெளிபடுத்த வேண்டிய கருத்தை பொதுவெ... மேலும் பார்க்க

உர மேலாண்மை மூலம் பாக்கு உற்பத்தியை அதிகரிக்கலாம்

உர மேலாண்மையில் கவனம் செலுத்துவதன் மூலம் பாக்கு உற்பத்தியை அதிகரிக்கலாம் என வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோ... மேலும் பார்க்க

நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியின் நூலகத் துறை சாா்பில் முதலாமாண்டு மாணவா்களுக்கு ஏா்லி போ்டு என்ற தலைப்பில் புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்ட... மேலும் பார்க்க