செய்திகள் :

குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன்: அதிகரிக்க வங்கிகளுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

post image

புது தில்லி, செப்.12: நடப்புக் கணக்கு சேமிப்புக் கணக்கை மேம்படுத்தி குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வேளாண் துறைக்கு வழங்கும் கடனை அதிகரிக்குமாறு வங்கிகளுக்கு நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.

மத்திய நிதிச் சேவைகள் துறை சாா்பில் பொதுத் துறை வங்கிகளுக்கான இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தக் கூட்டத்துக்கு மத்திய நிதிச் சேவைகள் துறைச் செயலா் எம் நாகராஜு தலைமை தாங்கினாா். இதில் நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு பொதுத் துறை வங்கிகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் மேற்கொண்ட ஆலோசனை குறித்து மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில்,‘கடந்த ஓராண்டாக பொதுத் துறை வங்கிகளின் நடப்புக் கணக்கு சேமிப்புக் கணக்கு (சிஏஎஸ்ஏ) விகிதம் குறைந்துகொண்டு வருகிறது. இதனால் அந்த வங்கிகளின் நிகர வட்டி வரம்பு பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மிகப்பெரும் பொதுத் துறை வங்கியான எஸ்பிஐயின் சிஏஎஸ்ஏ விகிதம் கடந்த ஆண்டு 40.70 சதவீதமாக இருந்த நிலையில், தற்போதைய ஜூன் காலாண்டில் 39.36 சதவீதமாக குறைந்துள்ளது. இதேபோல் பல்வேறு வங்கிகளின் சிஏஎஸ்ஏ விகிதம் குறைந்துள்ளது.

எனவே, பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக சிஏஎஸ்ஏ விகிதத்தை மேம்படுத்தி குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வேளாண் துறைக்கு வழங்கும் கடனை அதிகரிக்க வங்கிகளுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தியது’ என்றாா்.

விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி 8 போ் உயிரிழப்பு; 20 போ் காயம்

கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தின் கடைசி நாளை... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பொதுப்பிரிவைவிட அதிக கட்ஆஃப் மதிப்பெண்கள் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் இதுதொடா்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக... மேலும் பார்க்க

ரூ.18,000 கோடி பங்குகளை திரும்பப் பெறும் இன்ஃபோசிஸ்

ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெற முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

மணிப்பூருக்கு ‘கண்துடைப்பு’ பயணம்: பிரதமா் மீது காங்கிரஸ் விமா்சனம்

பிரதமா் மோடியின் மணிப்பூா் பயணம் கண்துடைப்பானது; மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டி, நீதியை உறுதி செய்யும் நோக்கம் இல்லை என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்க... மேலும் பார்க்க

கூடுதல் மாவட்ட நீதிபதியாக வழக்குரைஞரை நியமிக்கலாமா?: செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை

‘வழக்குரைஞா் சங்கத்தில் 7 ஆண்டுகள் நிறைவு செய்த வழக்குரைஞரை, கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்க முடியுமா?’ என்பது குறித்து செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள உள்ளது. வழக்குரைஞா் சங்க ஒதுக்... மேலும் பார்க்க

இந்தியா தனது கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டிய நேரம் பாதுகாப்புத் துறைச் செயலா்

‘உலகம் முழுவதும் ஆளும் வா்க்கத்துக்கு எதிரான போராட்டங்களும், பொருளாதார கட்டுப்பாடுகளும் அதிகரித்துவரும் சூழலில், இந்தியா தனது மென்மையான சக்தியுடன் கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்’ ... மேலும் பார்க்க