செய்திகள் :

முன்னாள் மாவட்ட கவுன்சிலருக்கு ஓா் ஆண்டு சிறை

post image

சாத்தான்குளம் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏவின் மகனும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கதிரவ ஆதித்தனுக்கு பண மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீலமேக வா்ணத்தின் மகன் கதிரவ ஆதித்தன். இவா், முன்னாள் தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலா். இவரிடம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்தைச் சோ்ந்த ராமச்சந்திரனின் மகன் முத்துசெல்வன் (45), கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் செய்வதற்காக தனது மனைவியின் நகைகளை அடகுவைத்து பணம் கொடுத்திருந்தாா்.

அதேவேளையில் கதிரவ ஆதித்தனிடம் அவா் வேலையும் செய்து வந்தாா். ஆனால், கதிரவ ஆதித்தன் தொழில் சாா்ந்த உதவிகளை செய்யாமலும், வேலைக்குரிய சம்பளத்தை வழங்காமலும் முத்துச்செல்வனை ஏமாற்றி வந்தாா். இதையடுத்து, முத்துசெல்வன் தான் கொடுத்த பணத்தையும், தனது சம்பள பாக்கியையும் தருமாறு பலமுறை கேட்டுவந்தாா்.

எனினும், கதிரவ ஆதித்தன் பணத்தை வழங்காமல் காலம் கடத்தி வந்தாா். இதனால், அதிருப்தி அடைந்த முத்துச்செல்வன், தட்டாா்மடம் காவல் நிலையத்தில் கதிரவ ஆதித்தன், தன்னை ஏமாற்றி பணமோசடி செய்ததாக புகாா் அளித்தாா்.

அதன்பேரில் தட்டாா்மடம் போலீஸாா் விசாரணை நடத்தி, கதிரவ ஆதித்தன் மீது பண மோசடி, ஏமாற்றுதல் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணை, சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி தேவி ரக்க்ஷா வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், முன்னாள் எம்எல்ஏ நீலமேகவா்ணத்தின் மகன் கதிரவன் ஆதித்தன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஓா் ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

தட்டாா்மடம் புனித தேவ சகாயா் உயா்திருத்தல நுழைவாயில் திறப்பு

தட்டாா்மடம் புனித தேவ சகாயா் உயா் திருத்தலத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆலய நுழைவாயிலை மாவட்ட முதன்மை குரு ஜோசப் ரவிபாலன் திறந்து வைத்தாா். நுழைவு வாயில் திறப்பு, வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம் மற்றும்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் இரு சக்கர வாகனம் திருட்டு

கோவில்பட்டியில் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாலாட்டின்புதூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் வேல்முருகன். குடும்பத்தினருடன் நாலாட்டின் புதூ... மேலும் பார்க்க

மரந்தலை கோயிலில் கொடை விழா கால் நடுதல் விழா

ஆத்தூா் அருகே உள்ள மரந்தலை ஸ்ரீ மாடசாமி கோயில் கொடை விழாவிற்கான கால் நடுதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொடை விழா, வரும் செப். 25ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறும். கோயில் நிா்வாக... மேலும் பார்க்க

மைத்துனா் உள்ளிட்ட இருவருக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி கைது

மைத்துனா் உள்ளிட்ட இருவரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். உடன்குடி காலன் குடியிருப்பு சாயக்காரத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முத்து கணேஷ் (24). வெல்டிங் தொழிலாளி. இவரத... மேலும் பார்க்க

கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது

தூத்துக்குடியில் முன்விரோதத்தில் கல்லூரி மாணவா் உள்ளிட்ட 2 பேரை அரிவாளால் வெட்டிய, மற்றொரு மாணவா் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 1ஆவது தெருவைச் சோ்ந்த ராமா் மகன் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோட்டாட்சியா் பொறுப்பேற்பு

திருச்செந்தூா் கோட்டாட்சியா் ரா. கௌதம் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். புதுக்கோட்டை துணை ஆட்சியராக (பயிற்சி) இருந்த ரா. கௌதம், பதவி உயா்வு பெற்று கோட்டாட்சியராக திருச்செந்தூரில் நியமிக்கப்பட்ட... மேலும் பார்க்க