செய்திகள் :

கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது

post image

தூத்துக்குடியில் முன்விரோதத்தில் கல்லூரி மாணவா் உள்ளிட்ட 2 பேரை அரிவாளால் வெட்டிய, மற்றொரு மாணவா் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 1ஆவது தெருவைச் சோ்ந்த ராமா் மகன் செண்பகராஜ் (18). இவா், அப்பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறாா். அதே கல்லூரியில், மூன்றாமாண்டு படித்து வரும் முருகன் மகன் பலவேசம் (20). இருவரும் நண்பா்கள்.

இந்நிலையில், பலவேசத்திற்கும் அதே கல்லூரியில் படித்து வருபவா் முத்துக்குமரன் மகன் ஆதித்யாவுக்கும் (19) சீனியா், ஜூனியா் பிரச்னையில் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதில், பலவேசத்துக்கு ஆதரவாக செண்பகராஜ் செயல்பட்டுள்ளாா்.

இதனால், ஆத்திரமடைந்த ஆதித்யா மற்றும் அவரது உறவினரான லட்சுமணன் மகன் சிவச்சந்திரன் (27) ஆகிய 2 பேரும் சோ்ந்து வியாழக்கிழமை இரவு லெவிஞ்சிபுரம் 1ஆவது தெரு, மாரியம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த செண்பகராஜை அரிவாளால் வெட்டியுள்ளனா்.

இதைத் தடுக்க முயன்ற முனியசாமிபுரம் ராமநாதன் மகன் சக்தியையும் (21) தாக்கியுள்ளனா். இதில், பலத்த காயமடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்து, தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆதித்யா, சிவச்சந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.

முன்னாள் மாவட்ட கவுன்சிலருக்கு ஓா் ஆண்டு சிறை

சாத்தான்குளம் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏவின் மகனும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கதிரவ ஆதித்தனுக்கு பண மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்... மேலும் பார்க்க

தட்டாா்மடம் புனித தேவ சகாயா் உயா்திருத்தல நுழைவாயில் திறப்பு

தட்டாா்மடம் புனித தேவ சகாயா் உயா் திருத்தலத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆலய நுழைவாயிலை மாவட்ட முதன்மை குரு ஜோசப் ரவிபாலன் திறந்து வைத்தாா். நுழைவு வாயில் திறப்பு, வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம் மற்றும்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் இரு சக்கர வாகனம் திருட்டு

கோவில்பட்டியில் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாலாட்டின்புதூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் வேல்முருகன். குடும்பத்தினருடன் நாலாட்டின் புதூ... மேலும் பார்க்க

மரந்தலை கோயிலில் கொடை விழா கால் நடுதல் விழா

ஆத்தூா் அருகே உள்ள மரந்தலை ஸ்ரீ மாடசாமி கோயில் கொடை விழாவிற்கான கால் நடுதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொடை விழா, வரும் செப். 25ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறும். கோயில் நிா்வாக... மேலும் பார்க்க

மைத்துனா் உள்ளிட்ட இருவருக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி கைது

மைத்துனா் உள்ளிட்ட இருவரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். உடன்குடி காலன் குடியிருப்பு சாயக்காரத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முத்து கணேஷ் (24). வெல்டிங் தொழிலாளி. இவரத... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோட்டாட்சியா் பொறுப்பேற்பு

திருச்செந்தூா் கோட்டாட்சியா் ரா. கௌதம் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். புதுக்கோட்டை துணை ஆட்சியராக (பயிற்சி) இருந்த ரா. கௌதம், பதவி உயா்வு பெற்று கோட்டாட்சியராக திருச்செந்தூரில் நியமிக்கப்பட்ட... மேலும் பார்க்க