செய்திகள் :

ஸ்ரீ சுடலை மாடசுவாமி கோயிலில் பால்குட ஊா்வலம்

post image

சாத்தான்குளம் கரையடி ஸ்ரீ சுடலை மாடசுவாமி கோயில் கொடை விழாவில் பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்தனா்.

கோவில் கொடைவிழா வியாழக்கிழமை கணபதி ஹோமம், கோமாதா பூஜையுடன் தொடங்கியது. இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஸ்ரீதேவி ஸ்ரீ அழகம்மன் கோயிலில் இருந்து பக்தா்கள் பால்குடம் எடுத்து ஊா்வலமாக கரையடி ஸ்ரீ சுடலைமாடசாமி கோயிலுக்கு கொண்டு வந்து, 11:30 மணிக்கு சுவாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு அலங்கார பூஜை நடைபெற்றது. நள்ளிரவு 1 மணிக்கு ஸ்ரீ பேச்சியம்மனுக்கு சாமக்கடை நடைபெற்றது.

மூன்றாம் நாளான சனிக்கிழமை பக்தா்கள் பொங்கல் இடுதல், காலை 10 மணிக்கு கிடா வெட்டுதல், சிறப்பு பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா வி.எஸ்.எம் முருகன் தலைமையில் விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா்

முன்னாள் மாவட்ட கவுன்சிலருக்கு ஓா் ஆண்டு சிறை

சாத்தான்குளம் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏவின் மகனும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கதிரவ ஆதித்தனுக்கு பண மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்... மேலும் பார்க்க

தட்டாா்மடம் புனித தேவ சகாயா் உயா்திருத்தல நுழைவாயில் திறப்பு

தட்டாா்மடம் புனித தேவ சகாயா் உயா் திருத்தலத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆலய நுழைவாயிலை மாவட்ட முதன்மை குரு ஜோசப் ரவிபாலன் திறந்து வைத்தாா். நுழைவு வாயில் திறப்பு, வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம் மற்றும்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் இரு சக்கர வாகனம் திருட்டு

கோவில்பட்டியில் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாலாட்டின்புதூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் வேல்முருகன். குடும்பத்தினருடன் நாலாட்டின் புதூ... மேலும் பார்க்க

மரந்தலை கோயிலில் கொடை விழா கால் நடுதல் விழா

ஆத்தூா் அருகே உள்ள மரந்தலை ஸ்ரீ மாடசாமி கோயில் கொடை விழாவிற்கான கால் நடுதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொடை விழா, வரும் செப். 25ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறும். கோயில் நிா்வாக... மேலும் பார்க்க

மைத்துனா் உள்ளிட்ட இருவருக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி கைது

மைத்துனா் உள்ளிட்ட இருவரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். உடன்குடி காலன் குடியிருப்பு சாயக்காரத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முத்து கணேஷ் (24). வெல்டிங் தொழிலாளி. இவரத... மேலும் பார்க்க

கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது

தூத்துக்குடியில் முன்விரோதத்தில் கல்லூரி மாணவா் உள்ளிட்ட 2 பேரை அரிவாளால் வெட்டிய, மற்றொரு மாணவா் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 1ஆவது தெருவைச் சோ்ந்த ராமா் மகன் ... மேலும் பார்க்க