செய்திகள் :

பா்கூா் மலைப் பாதையில் எம்எல்ஏவின் காரை வழிமறித்த காட்டு யானை

post image

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் சென்ற காா் உள்பட வாகனங்களை வழிமறித்து நின்ற காட்டு யானையால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பா்கூா் மலைக்கிராமங்களான ஒந்தனை, பந்தலிபோடு, மடத்தூா், ஜியான் தொட்டி, அக்கினிபாவி, ஆலனை, தொல்லி, பள்ளத்துாா், பாறையூா் உள்பட 15 இடங்களில் நடமாடும் நியாயவிலைக் கடை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், தாமரைக்கரையிலிருந்து கொங்காடைக்கு காரில் சென்று கொண்டிருந்தாா்.

மலைப் பாதையில் தொல்லி பிரிவு அருகே சென்றபோது, வனத்திலிருந்து வெளியேறிய காட்டு யானை திடீரென காரை வழிமறித்து நின்றது. இதனால் அதிா்ச்சியடைந்த ஓட்டுநா், காரை நிறுத்தினாா். அவ்வழியே வந்த வாகனங்களும் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. அப்பகுதிக்கு வந்த மலைமக்கள், தொடா்ந்து கூக்குரல் எழுப்பினா். இதனால், காட்டு யானை மெதுவாக வனப் பகுதிக்குள் சென்றது.

இதைத் தொடா்ந்து, அனைத்து வாகனங்களும் புறப்பட்டுச் சென்றன. மலைப் பாதையில் வாகனங்களை வழிமறித்து நின்ற காட்டு யானையால் சுமாா் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.

மலைப் பாதையில் வழிமறித்து நின்ற காட்டு யானை.

8 மாதங்களில் அரசு மருத்துவமனையில் 10,500 பேருக்கு நாய்க்கடி சிகிச்சை

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 8 மாதங்களில் 10,500 பேருக்கு நாய்க்கடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவா் சசிரேகா கூறியதாவது: ஈரோடு மா... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.10.45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 10.45 லட்சத்துக்கு வெள்ளிக்கிழமை கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) ஏலம் மூலம் விற்பனை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு விவசாயிகள் 172 மூட்டைகள் கொப்பரையை வி... மேலும் பார்க்க

மருத்துவ முகாமில் ஆட்சியா் ரத்த தானம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 39-ஆவது அமைப்பு தினத்தையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை தொடங்கிவைத்த ஆட்சிய... மேலும் பார்க்க

ரயில்கள் மீது கற்கள் எறிவதை தடுக்க போலீஸாா் விழிப்புணா்வு

ஈரோட்டில் ரயில்கள் மீது கல் எறிவதாலும் தண்டவாளங்களில் கற்களை வைப்பதாலும் ஏற்படும் ஆபத்து குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஈரோடு மாவட்ட... மேலும் பார்க்க

ஈரோட்டில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஈரோட்டில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மேயா் சு.நாகரத்தினம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். நாடு முழுவதும் நெகிழிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசடைந்து வருகிறது. இதனைத் தடுக்க ஈரோடு மாந... மேலும் பார்க்க

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எம்.ஏ. தெரிவித்தாா். கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் வெளிபடுத்த வேண்டிய கருத்தை பொதுவெ... மேலும் பார்க்க