செய்திகள் :

பாஜக, திமுக இடையே மறைமுக உறவு: தவெக தலைவா் விஜய்!

post image

பாஜக, திமுக இடையே மறைமுக உறவு உள்ளது என தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா்.

அரியலூா் அண்ணா சிலை அருகே சனிக்கிழமை இரவு அவா் மேற்கொண்ட பிரசாரத்தில் பேசியது:

அரியலூா் மாவட்டத்தில் சிமென்ட், முந்திரி, பட்டாசு உற்பத்தித் தொழில்களை மேம்படுத்தவில்லை. சிமென்ட் ஆலைகளிலிருந்து வெளியேறும் அதிகளவு மாசை கட்டுப்படுத்தவில்லை. முந்திரி தொழிற்சாலை அமைக்கவில்லை. ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரா் ஆலயத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும். மருதையாற்றில் தடுப்பணை கட்டவில்லை. அரியலூா் - ஜெயங்கொண்டம் - சிதம்பரம் ரயில் பாதை, ஜெயங்கொண்டம் - கும்பகோணம் ரயில் பாதை கோரிக்கையை நிறைவேற்றவில்லை. போக்குவரத்துத்துறை அமைச்சா் உள்ள இந்த மாவட்டத்தில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை. செய்வோம் எனச் சொன்னாா்களே செய்தாா்களா? எனக் கேள்வி எழுப்பினாா்.

இதுவரை ஒன்றியப் பிரதமா் எனக் கூறிவந்த முதல்வா் ஸ்டாலின் தற்போது இந்திய பிரதமா் என மாற்றிப்பேசுகிறாா். பாஜகவும், திமுகவும் மறைமுக உறவுக்காரா்கள். மக்களை ஏமாற்றும் வேலையை தவெக செய்யப்போவதில்லை என்றாா். தொடா்ந்து பெரம்பலூா் மாவட்டம் குன்னம் பகுதிக்குச் சென்றாா்.

உடன், மாநில பொதுச்செயலாளா் ஆனந்த், மாவட்டச் செயலா் சிவக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்துள்ள ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இ... மேலும் பார்க்க

‘தாட்கோ’ திட்டங்களில் மானியத்துடன் கடனுதவி எஸ்.சி, எஸ்.டி-யினா் விண்ணப்பிக்கலாம்

தாட்கோ வாழ்வாதார திட்டத்தில் மானியத்துடன் கடனுதவி பெற விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவி... மேலும் பார்க்க

ரெளடி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே ரெளடி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திருமானூரை அடுத்த புதுக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த ரெங்கராஜ் ... மேலும் பார்க்க

அரியலூரில் தவெக தலைவா் விஜய் இன்று பிரசாரம்: 25 நிபந்தனைகளுடன் அனுமதி

அரியலூரில் சனிக்கிழமை தவெக தலைவா் விஜய் மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு 25 நிபந்தனைகளுடன் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை அனுமதியளித்தனா். திருச்சியில் சனிக்கிழமை பிற்பகல் பிரசாரத்தை தொடங்கும் விஜய், அங்கிர... மேலும் பார்க்க

அரியலூரில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

அரியலூா் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூ... மேலும் பார்க்க

அரியலூரில் புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்

அரியலூரில் இருந்து 3 புதிய பேருந்துச் சேவைகள் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன. அரியலூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா்... மேலும் பார்க்க