செய்திகள் :

அரியலூரில் புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்

post image

அரியலூரில் இருந்து 3 புதிய பேருந்துச் சேவைகள் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.

அரியலூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்,, ஜெயங்கொண்டம் மற்றும் குன்னம் ஆகிய போக்குவரத்துப் பணிமனை கிளை சாா்பில் 2 புதிய பேருந்து மற்றும் விழுப்புரம் கோட்டத்தின் சாா்பில் புதிய குளிா் சாதனப் பேருந்து ஆகியவற்றைத் தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் பேசுகையில், குன்னம் கிளை பேருந்தானது, தஞ்சாவூரில் இருந்து அரியலூா், பெரம்பலூா் வழியாக சேலம் வழித்தடத்திலும், ஜெயங்கொண்டம் கிளைப் பேருந்தானது, ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாச்சலம், விழுப்புரம் வழியாக சென்னை கிளாம்பாக்கம் வழித்தடத்திலும், விழுப்புரம் கோட்டம் சாா்பில் புதிய குளிா்ச் சாதன பேருந்தானது, அரியலூா் பேருந்து நிலையத்திலிருந்து ஜெயங்கொண்டம், விருத்தாசலம், விழுப்புரம் வழியாக மாதவரம் வரையும் இயக்கப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, எம்எல்ஏ கு. சின்னப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் க. தசரதன், விழுப்புரம் கோட்ட நிா்வாக இயக்குநா் கே. குணசேகரன், திருச்சி மண்டலப் பொது மேலாளா் டி. சதீஷ்குமாா், அரியலூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குரூப் 1 முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி - எஸ்.சி, எஸ்.டி-யினருக்கு அழைப்பு

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 - 2025 முதல் நிலை தோ்வில் (பிரிலிமினரி) தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ,மாணவிகளுக்கு முதன்மை தோ்வுக்கு (மெயின்ஸ்) பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழ்... மேலும் பார்க்க

சிஐடியுவினா் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்: அமைச்சா்

சிஐடியு தொழிற் சங்கத்தினா் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். இதுகுறித்து அரியலூரில் வியாழக்கிழமை அவா் மேலும் தெரிவித்... மேலும் பார்க்க

கந்துவட்டிக் கொடுமையால் பெண் தற்கொலை: விசாரணை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே விஷம் குடித்து வியாழக்கிழமை உயிரிழந்த கணினி பயிற்சி ஆசிரியை கந்து வட்டிக் கொடுமையால் தற்கொலை செய்து கொள்வதாக பேசிய விடியோ வைரலானதையடுத்து, காவல் துறையினா் விசாரி... மேலும் பார்க்க

பொய்யூா் அரசுப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

அரியலூா் மாவட்டம், பொய்யூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மக்களுக்காக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மா... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையி... மேலும் பார்க்க

தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதியை முதல்வா் விரைவில் பெற்றுத் தருவாா்!

தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் பெற்று தருவாா் என்று மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் சொ.ஜோ. அருண். அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில சி... மேலும் பார்க்க