செய்திகள் :

கந்துவட்டிக் கொடுமையால் பெண் தற்கொலை: விசாரணை

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே விஷம் குடித்து வியாழக்கிழமை உயிரிழந்த கணினி பயிற்சி ஆசிரியை கந்து வட்டிக் கொடுமையால் தற்கொலை செய்து கொள்வதாக பேசிய விடியோ வைரலானதையடுத்து, காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மேலகுடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன் மனைவி சத்யா. இவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் கணினி பயிற்றுநராக பணியாற்றி வந்த சத்யா கடந்த 9 ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்து, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இந்நிலையில் கந்து வட்டி கொடுமையால் தான் தற்கொலை செய்து கொள்வதாக சத்யா பேசிய விடியோ வைரலாகி உள்ளது.

அவா் தனது கணவருக்கு அனுப்பிருந்த விடியோவில், அதே பகுதியைச் கலைவாணி, கெளசல்யா, கவிதா அவரது தாய் மற்றும் அம்பிகா ஆகியோரிடம் வாங்கிய அசலுக்கு மேலாக வட்டி பணம் கொடுத்தும், அவா்கள் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு, தன்னைத் தொந்தரவு செய்தாகவும், இதனால் மன உளைச்சல் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாகவும், அதற்கு தன்னை மன்னித்து விடுமாறும் கூறியுள்ளாா். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரியலூரில் புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்

அரியலூரில் இருந்து 3 புதிய பேருந்துச் சேவைகள் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன. அரியலூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா்... மேலும் பார்க்க

குரூப் 1 முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி - எஸ்.சி, எஸ்.டி-யினருக்கு அழைப்பு

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 - 2025 முதல் நிலை தோ்வில் (பிரிலிமினரி) தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ,மாணவிகளுக்கு முதன்மை தோ்வுக்கு (மெயின்ஸ்) பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழ்... மேலும் பார்க்க

சிஐடியுவினா் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்: அமைச்சா்

சிஐடியு தொழிற் சங்கத்தினா் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். இதுகுறித்து அரியலூரில் வியாழக்கிழமை அவா் மேலும் தெரிவித்... மேலும் பார்க்க

பொய்யூா் அரசுப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

அரியலூா் மாவட்டம், பொய்யூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மக்களுக்காக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மா... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையி... மேலும் பார்க்க

தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதியை முதல்வா் விரைவில் பெற்றுத் தருவாா்!

தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் பெற்று தருவாா் என்று மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் சொ.ஜோ. அருண். அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில சி... மேலும் பார்க்க