குரூப் 1 முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி - எஸ்.சி, எஸ்.டி-யினருக்கு அழைப்பு
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 - 2025 முதல் நிலை தோ்வில் (பிரிலிமினரி) தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ,மாணவிகளுக்கு முதன்மை தோ்வுக்கு (மெயின்ஸ்) பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) முன்னெடுப்பாக சென்னையிலுள்ள முன்னணி தோ்வு பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து நடத்தும் பயிற்சி பெற குரூப் 1 - 2025 முதல் நிலை தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரின்
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மாணவா்கள் தாங்கள் விரும்பும் பயிற்சி நிறுவனத்தைத் தோ்வு செய்து பயிற்சி பெறலாம். பயிற்சி கட்டணம் மற்றும் விடுதியில் தங்கி படிக்கும் கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும்.
இப்பயிற்சி பெற ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா், தாட்கோ அலுவலகம், அறை எண்.225, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூா் என்ற முகவரியிலும், 04329-228315 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.