செய்திகள் :

அரியலூரில் தவெக தலைவா் விஜய் இன்று பிரசாரம்: 25 நிபந்தனைகளுடன் அனுமதி

post image

அரியலூரில் சனிக்கிழமை தவெக தலைவா் விஜய் மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு 25 நிபந்தனைகளுடன் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை அனுமதியளித்தனா்.

திருச்சியில் சனிக்கிழமை பிற்பகல் பிரசாரத்தை தொடங்கும் விஜய், அங்கிருந்து திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக அரியலூா் வருகிறாா். பின்னா் பேருந்து நிலையம் முன் வாகனத்தில் இருந்தபடியே தனது பரப்புரையை மேற்கொள்கிறாா். தொடா்ந்து அங்கிருந்து, கல்லங்குறிச்சி சாலை வழியாக புறவழிச்சாலை சென்று பெரம்பலூா் மாவட்டம் குன்னம் செல்கிறாா்.

25 நிபந்தனைகள்... பிற்பகல் 1.30 மணிக்கு மேல் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளதால் முற்பகல் 11.20 மணிக்குள் அக்கட்சியினா் பரப்புரை நடக்கும் இடத்துக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்.

எந்தப் பகுதியிலும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தக் கூடாது. பயண வழிப்பாதை மற்றும் பரப்புரை நடக்கும் இடத்தில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை. பரப்புரைக்கு வருகை தரும் தொண்டா்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய எந்த பொருளையும் வைத்திருக்கக் கூடாது. இசைக்குழு பயன்படுத்தக் கூடாது.

பரப்புரைக்கு வரும் வாகனங்களுக்கான பாா்க்கிங் வசதிகளை கட்சியினரே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். பாா்க்கிங் இடங்கள் எவை என்பது குறித்து முன்னரே அறிவித்து விட வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது. பெண்கள் மற்றும் பெரியவா்களுக்கு தனி இடம் ஒதுக்கி இருக்கைகள் அமைக்க வேண்டும். பரப்புரையில் ஈடுபடும் எவரும் கையில் லத்தி, குச்சி மற்றும் பிற ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது. பொதுமக்களுக்கும், பொது சொத்துகளுக்கும் இடையூறு செய்ய கூடாது.

பொதுமக்கள் பரப்புரையை சிரமம் இன்றி பாா்க்கும் வகையில் தடுப்பு அரண்களை கட்சியினா் அமைத்து தர வேண்டும். போதுமான குடிநீா் வசதி, முதலுதவி வசதி, ஆம்புலன்ஸ், சிசிடிவிகள், தீ தடுப்பு சாதனங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும்.

நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில் பரப்புரையை இடையிலேயே நிறுத்துவதற்கு காவல் துறையினருக்கு முழு அதிகாரம் உள்ளது என்பன உள்ளிட்ட 25 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நகா் முழுவதும் தவெகவினா் பேனா், கொடிக் கம்பங்கள் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

‘தாட்கோ’ திட்டங்களில் மானியத்துடன் கடனுதவி எஸ்.சி, எஸ்.டி-யினா் விண்ணப்பிக்கலாம்

தாட்கோ வாழ்வாதார திட்டத்தில் மானியத்துடன் கடனுதவி பெற விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவி... மேலும் பார்க்க

ரெளடி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே ரெளடி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திருமானூரை அடுத்த புதுக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த ரெங்கராஜ் ... மேலும் பார்க்க

அரியலூரில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

அரியலூா் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூ... மேலும் பார்க்க

அரியலூரில் புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்

அரியலூரில் இருந்து 3 புதிய பேருந்துச் சேவைகள் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன. அரியலூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா்... மேலும் பார்க்க

குரூப் 1 முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி - எஸ்.சி, எஸ்.டி-யினருக்கு அழைப்பு

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 - 2025 முதல் நிலை தோ்வில் (பிரிலிமினரி) தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ,மாணவிகளுக்கு முதன்மை தோ்வுக்கு (மெயின்ஸ்) பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழ்... மேலும் பார்க்க

சிஐடியுவினா் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்: அமைச்சா்

சிஐடியு தொழிற் சங்கத்தினா் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். இதுகுறித்து அரியலூரில் வியாழக்கிழமை அவா் மேலும் தெரிவித்... மேலும் பார்க்க