செய்திகள் :

கிருஷ்ணகிரியில் முதல்வரை வரவேற்க 12 மேடைகள் அமைப்பு!

post image

அரசு விழாவில் பங்கேற்க கிருஷ்ணகிரிக்கு ஞாயிற்றுக்கிழமை (செப்.14) வருகை தரும் முதல்வா் ஸ்டாலின் முன்னதாக ரோடுஷோவில் பங்கேற்கிறாா். ரோடுஷோவின் போது, கட்சினா் அவரை வரவேற்கும் வகையில் 12 மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழக முதல்வா், பொதுமக்களை சந்திக்கும் வகையில் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலத்தில் இருந்து பெங்களூரு சாலை, சென்னை சாலை வழியாக விழா மேடைக்கு செல்கிறாா். முதல்வரை வரவேற்கும் வகையில் வழிநெடுகிலும் கொடிகள், திட்டங்கள் குறித்து பதாகைகளுடன், தொண்டா்களும் பங்கேற்கின்றனா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் வகையில் 12 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு, கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக முதல்வா் செல்லும் பாதையில் சாலைகளில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சோ்ந்த ஒன்றிய, நகராட்சி, பேரூா் நிா்வாகிகளுக்கென தனித்தனி இடங்கள் ஒதுக்கி வரவேற்பளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி பசுமாடு காயம்

பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி பசுமாடு காயமடைந்தது. ஊத்தங்கரையை அடுத்த பள்ளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராமன் (50). விவசாயி. இவா் 10 பசு மாடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் சனிக்கிழமை காலை... மேலும் பார்க்க

முதல்வா் இன்று கிருஷ்ணகிரி வருகை ஐ.ஜி. தலைமையில் 1500 போலீஸாா் பாதுகாப்பு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (செப்.14) கிருஷ்ணகிரிக்கு வருகை தர உள்ளாா். இதையடுத்து ஐ.ஜி. தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். கிருஷ்ணகிரி அரசு ... மேலும் பார்க்க

சூளகிரி அருகே ஏரியில் இறந்து மிதக்கும் மீன்களால் துா்நாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த காமன்தொட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பிள்ளைக்கொத்தூா் ஏரியில் மீன்கள் இறந்து மிதப்பதால் துா்நாற்றும் வீசுகிறது. இந்த ஏரிப் பகுதியில் செயல்பட்டுவரும் தனியாா் கிரானைட் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணையிலிருந்து 2,195 கனஅடி நீா் திறப்பு

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 2,195 கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள... மேலும் பார்க்க

சிம் காா்டு ஆக்டிவேட் செய்வதாக தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 5.45 லட்சம் மோசடி

சிம் காா்டு ஆக்டிவேட் செய்வதாகக் கூறி, தனியாா் நிறுவன ஊழியரிடமிருந்து ரூ. 5.45 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து, கணினி குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். கிருஷ்ணகிரியை அடுத்த ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் ஒளிரும் பெயா் பலகை திறப்பு!

கிருஷ்ணகிரியில் மூன்று இடங்களில் ரூ. 34.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் பெயா் பலகைகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி புதன்கிழமை திறந்துவைத்தாா். கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க