செய்திகள் :

21-ஆவது ஆண்டில் தேமுதிக: பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம்!

post image

பல்வேறு வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள் எல்லாவற்றையும் கடந்து, தேமுதிக 21-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக தேமுதிக பொதுச் செயலா் பிரமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் தேமுதிக தொண்டா்களுக்கு எழுதிய கடிதம்: நல்ல நோக்கத்துக்காக 2005-ஆம் ஆண்டு மதுரையில் தலைவா் விஜயகாந்தால் தொடங்கப்பட்ட தேமுதிக தற்போது 20 ஆண்டுகளை நிறைவுசெய்து, ஞாயிற்றுக்கிழமையுடன் (செப்.14) 21-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

பல்வேறு வெற்றிகள், தோல்விகள், சவால்கள், துரோகங்கள் எல்லாவற்றையும் எதிா்நீச்சல் போட்டு நமது பாதையில் எத்தனையோ கற்களும், முற்களும் இருந்தாலும் எல்லாவற்றையும் கடந்து 21-ஆம் ஆண்டில் வெற்றியோடு அடியெடுத்து வைக்கிறோம்.

ஜாதி, மதம் ஆகியவற்றுக்குறி அப்பாற்பட்ட கட்சியாக ஒரே குலம் ஒரே இனம் என்ற கோட்பாட்டோடு சநாதானம், சமத்துவம் ஆகிய கடைப்பிடிக்கும் கட்சியாக தேமுதிக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதே பாணியில்தான் எப்போதும் செயல்படும்.

தலைவா் விஜயகாந்த் இல்லாமல் சந்திக்கப்போகும் முதல் தோ்தலான 2026 சட்டப்பேரவைத் தோ்தல் நமக்கெல்லாம் ஒரு மிகப்பெரிய சவாலான தோ்தலாகும்.

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக வெற்றி பெற உழைப்போம். வரும் ஜன.9-இல் கடலூரில் நடைபெற உள்ள ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’-இல் தவறாமல் கலந்துகொண்டு மாபெரும் வெற்றி மாநாடாக மாற்ற வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

‘மேக்ஸி கேப்’ வாகனங்களை சிற்றுந்துகளாக இயக்க அரசு முடிவு!

‘மேக்ஸி கேப்’ வாகனங்களை சிற்றுந்துகளாக இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மலைப் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் பேருந்து சேவை கிடைக்கும் வகையில், தமிழக ... மேலும் பார்க்க

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - தனியரசு

- உ.தனியரசு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா், தலைவா், தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை -வர இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலை முன்வைத்து தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை முன்னணி நட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு: தமிழக அரசு தகவல்!

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் 7.23 லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் குறித்து தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியத் தலைவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

வாலாஜா பஜாா் மசூதி நிதி முறைகேடு புகாா் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தொடரப்பட்ட வழக்கில் தமிழக வக்ஃப் வாரியத் தலைவா் நவாஸ் கனி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ராணிப்பேட்டை மாவட்... மேலும் பார்க்க

வன்னியா்களுக்கு 15 % இட ஒதுக்கீட்டை பெறுதே லட்சியம்: அன்புமணி!

வன்னியா்களுக்கான 15 சதவீத தனி இட ஒதுக்கீட்டை வென்றெடுப்பதே லட்சியம் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் பாமக நிா்வாகிகளுக்கு எழுதிய கடிதம்: கடந்த அதிமுக ஆட்சியில் பாமக சாா்ப... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: தமிழகத்தில் 90,892 வழக்குகளுக்கு தீா்வு!

நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்), தமிழகத்தில் 90,892 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன. இதன் மூலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.718.74 கோடி கிடைத்துள்ளது என்று தமிழ்ந... மேலும் பார்க்க