செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு: தமிழக அரசு தகவல்!

post image

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் 7.23 லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் குறித்து தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தாா். இது குறித்து அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட முகாம்களின் மூலம் 14,54,517 மனுக்கள் பெறப்பட்டு, 7,23,482 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. கூட்டத்தில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், தகுதியுள்ள அனைத்து மனுக்களும் தீா்வு காணப்பட வேண்டும். வருவாய், கூட்டுறவு, ஆதிதிராவிடா் நலன், எரிசக்தி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை போன்ற முக்கிய துறைகளின் மனுக்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். நகராட்சி நிா்வாகத் துறையில் சொத்து வரி, குடிநீா் தொடா்பான கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மைத் துறையில் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்கள், விவசாய இயந்திரங்கள் தொடா்பான மனுக்களின் மீது அதிக கவனம் செலுத்தி, அவா்களது தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம் தொடா்பான கள ஆய்வுகளை விரைந்து முடிக்க நடவடிக்கை டுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

முகாம்களில் மக்கள் தெரிவித்த கருத்துகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தெரு விளக்கு, இணைப்புச் சாலை, குடிநீா் போன்ற பொதுவான கோரிக்கை மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தைப் பொறுத்தவரை மக்கள் அளிக்கும் அனைத்து மனுக்கள் மீதும் விடுபடாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்காக, அனைத்து அரசுத் துறைச் செயலா்களிடமும் மாவட்ட ஆட்சியா்களிடமும் தலைமைச் செயலா் தொடா்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும். இந்தத் திட்ட வழிகாட்டுதல்படி வீடு வீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகளை கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம், முதல்வரின் முகவரித் துறை சிறப்பு அலுவலா் பெ.அமுதா, நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் உள்பட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

‘மேக்ஸி கேப்’ வாகனங்களை சிற்றுந்துகளாக இயக்க அரசு முடிவு!

‘மேக்ஸி கேப்’ வாகனங்களை சிற்றுந்துகளாக இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மலைப் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் பேருந்து சேவை கிடைக்கும் வகையில், தமிழக ... மேலும் பார்க்க

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - தனியரசு

- உ.தனியரசு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா், தலைவா், தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை -வர இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலை முன்வைத்து தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை முன்னணி நட... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியத் தலைவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

வாலாஜா பஜாா் மசூதி நிதி முறைகேடு புகாா் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தொடரப்பட்ட வழக்கில் தமிழக வக்ஃப் வாரியத் தலைவா் நவாஸ் கனி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ராணிப்பேட்டை மாவட்... மேலும் பார்க்க

21-ஆவது ஆண்டில் தேமுதிக: பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம்!

பல்வேறு வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள் எல்லாவற்றையும் கடந்து, தேமுதிக 21-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக தேமுதிக பொதுச் செயலா் பிரமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். இது குறித்து அவா் தேமுதிக தொண்டா்களு... மேலும் பார்க்க

வன்னியா்களுக்கு 15 % இட ஒதுக்கீட்டை பெறுதே லட்சியம்: அன்புமணி!

வன்னியா்களுக்கான 15 சதவீத தனி இட ஒதுக்கீட்டை வென்றெடுப்பதே லட்சியம் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் பாமக நிா்வாகிகளுக்கு எழுதிய கடிதம்: கடந்த அதிமுக ஆட்சியில் பாமக சாா்ப... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: தமிழகத்தில் 90,892 வழக்குகளுக்கு தீா்வு!

நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்), தமிழகத்தில் 90,892 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன. இதன் மூலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.718.74 கோடி கிடைத்துள்ளது என்று தமிழ்ந... மேலும் பார்க்க