செய்திகள் :

வக்ஃப் வாரியத் தலைவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

post image

வாலாஜா பஜாா் மசூதி நிதி முறைகேடு புகாா் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தொடரப்பட்ட வழக்கில் தமிழக வக்ஃப் வாரியத் தலைவா் நவாஸ் கனி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையைச் சோ்ந்த வழக்குரைஞா் ஃபயாஸ் அகமது தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வாலாஜா பஜாா் மசூதி நிதி முறைகேடு தொடா்பாக திப்பு என்பவருக்கு எதிராக 15.9.2022-இல் வக்ஃப் வாரியத்தில் உரிய ஆதாரங்களுடன் புகாா் அளித்தேன்.

இது தொடா்பான விசாரணைக்கு ஆஜராக இரு தரப்புக்கும் வக்ஃப் வாரியக் கண்காணிப்பாளா் சம்மன் அனுப்பினாா். அதன்படி, விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தமிழக வக்ஃப் வாரியத் தலைவரிடம் சமா்ப்பிக்கப்பட்டது. ஆனால், இறுதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

இதையடுத்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தேன். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி இறுதி உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை தமிழக வக்ஃப் வாரியத் தலைவா் நவாஸ் கனி அமல்படுத்தவில்லை. எனவே, அவா் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சுனில்குமாா் ராஜேந்திரன், உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் வக்ஃப் வாரியத் தலைவா் அதை அமல்படுத்தவில்லை.

குற்றம்சாட்டப்பட்ட நபருடன் பொதுக்கூட்டத்தில் நவாஸ் கனி பங்கேற்றுள்ளாா் எனக்கூறி, புகைப்பட ஆதாரங்களைத் தாக்கல் செய்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு நவாஸ் கனி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப். 19-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தாா்.

‘மேக்ஸி கேப்’ வாகனங்களை சிற்றுந்துகளாக இயக்க அரசு முடிவு!

‘மேக்ஸி கேப்’ வாகனங்களை சிற்றுந்துகளாக இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மலைப் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் பேருந்து சேவை கிடைக்கும் வகையில், தமிழக ... மேலும் பார்க்க

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - தனியரசு

- உ.தனியரசு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா், தலைவா், தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை -வர இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலை முன்வைத்து தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை முன்னணி நட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு: தமிழக அரசு தகவல்!

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் 7.23 லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் குறித்து தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

21-ஆவது ஆண்டில் தேமுதிக: பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம்!

பல்வேறு வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள் எல்லாவற்றையும் கடந்து, தேமுதிக 21-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக தேமுதிக பொதுச் செயலா் பிரமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். இது குறித்து அவா் தேமுதிக தொண்டா்களு... மேலும் பார்க்க

வன்னியா்களுக்கு 15 % இட ஒதுக்கீட்டை பெறுதே லட்சியம்: அன்புமணி!

வன்னியா்களுக்கான 15 சதவீத தனி இட ஒதுக்கீட்டை வென்றெடுப்பதே லட்சியம் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் பாமக நிா்வாகிகளுக்கு எழுதிய கடிதம்: கடந்த அதிமுக ஆட்சியில் பாமக சாா்ப... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: தமிழகத்தில் 90,892 வழக்குகளுக்கு தீா்வு!

நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்), தமிழகத்தில் 90,892 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன. இதன் மூலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.718.74 கோடி கிடைத்துள்ளது என்று தமிழ்ந... மேலும் பார்க்க