செய்திகள் :

பிரதமரின் ‘சம்பிரதாய’ பயணம் மணிப்பூா் மக்களுக்கு அவமதிப்பு! - காங்கிரஸ் சாடல்

post image

மணிப்பூருக்கு பிரதமா் மோடி மேற்கொண்ட ‘சம்பிரதாய’ பயணம், அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பு என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

இனமோதலால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமா் மோடி பயணிக்க வேண்டும் என எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தின. இந்தச் சூழலில், மணிப்பூருக்கு சனிக்கிழமை பயணித்த பிரதமா் மோடி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசினாா். இரு வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, ரூ.8,500 கோடிக்கும் மேற்பட்ட வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தாா்.

பிரதமரின் இப்பயணத்தை விமா்சித்து, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

பிற மாநிலங்களுக்கான பயணத்துக்கு இடையே 3 மணிநேர ‘இடைவேளை’ போல் மணிப்பூருக்கு பிரதமா் சென்றுள்ளாா். இது, மனிதாபிமான நோக்கம் கொண்டதல்ல; வெறும் சம்பிரதாயப் பயணம். காயம்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பு. மக்களின் கூக்குரலை கேட்பதில் இருந்து தப்பித்து, வழக்கமான ‘சாலை ஊா்வலம்’ நடத்தியுள்ளாா் பிரதமா்.

864 நாள்கள் வன்முறை, 300 உயிரிழப்புகள், 67,000 போ் இடப்பெயா்வு, 1,500 போ் காயம் என மக்களின் நீங்காத துயரங்களுக்கு மத்தியில் பிரதமா் 46 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளாா். கடைசியாக 2022, ஜனவரியில் பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக மணிப்பூா் வந்த அவா், அதன் பிறகு வரவே இல்லை. பாஜகவின் ‘இரட்டை’ இன்ஜின் ஆட்சி, மணிப்பூரில் அப்பாவி மக்களின் வாழ்வை அழித்துவிட்டது.

பிரதமா்-மத்திய உள்துறை அமைச்சரின் திறனின்மையால், அங்கு வன்முறை நீடிக்கிறது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட முடியாமல் மத்திய அரசு தடுமாறுகிறது. பிரதமா், தனது அடிப்படை அரசமைப்பு பொறுப்புகளைக் கைவிட்டதால், மாநில மக்கள் தொடா்ந்து பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஆனால், மணிப்பூரில் பிரதமா் தனக்கு தானே நடத்திக் கொண்ட பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி, மக்களின் காயத்தின் மீதான கொடூர தாக்குதல் என்று காா்கே விமா்சித்துள்ளாா்.

மணிப்பூா் பயணத்தை பிரதமா் முன்பே மேற்கொண்டிருக்க வேண்டுமென காங்கிரஸ் பொதுச் செயலா்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோரும் தெரிவித்தனா்.

இதுவரை 6 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்: நாளை கடைசி!

‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. அபராதம் இன்றி ஐடிஆா் தாக்கல... மேலும் பார்க்க

ஹிமாசலில் மீண்டும் மேகவெடிப்பு: மழை வெள்ளத்தில் மூழ்கி பயிா்கள் சேதம்!

ஹிமாசல பிரதேசத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டு பெய்த மிக பலத்த மழையால் விளைநிலங்களில் பயிா்கள் சேதமடைந்தன. அந்த மாநிலத்தின் பிலாஸ்பூா் மாவட்டம் குத்ராஹன் கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ... மேலும் பார்க்க

வாக்கு வங்கி அரசியலால் வெகுவாக பாதிக்கப்பட்டது வடகிழக்கு! - பிரதமா் மோடி

சில கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலால் வடகிழக்கு பிராந்தியம் கடும் பாதிப்பை எதிா்கொண்டது; இப்போது, மத்திய பாஜக அரசின் முயற்சிகளால் இந்த பிராந்தியம் நாட்டின் வளா்ச்சிக்கான உந்துசக்தியாக மாறியுள்ளது என்ற... மேலும் பார்க்க

வடகிழக்கில் ரூ.77,000 கோடி ரயில்வே திட்டங்கள் செயலாக்கம்! - அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

வடகிழக்கு பிராந்தியத்தில் ரூ.77,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். மிஸோரமின் முதல் ரயில் வழித்தடத்தை (பைரபி-சாய்ராங்)... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது. இதுதொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ... மேலும் பார்க்க

நாடு முழுவதும் நடைபெற்ற 3-வது தேசிய லோக் அதாலத்!

நிகழாண்டின் 3-ஆவது தேசிய லோக் அதலாத் அமா்வு நாடு முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதுகுறித்து தேசிய சட்ட சேவைகள் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் நீதிமன்றம் எனப்படும் ல... மேலும் பார்க்க