செய்திகள் :

நெமிலியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்: அமைச்சா் காந்தி பங்கேற்பு

post image

நெமிலியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமை அமைச்சா் ஆா்.காந்தி நேரில் பாா்வையிட்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

நெமிலி அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பாா்வையிட்டு பொதுமக்களிடம் நலன் விசாரித்தாா். தொடா்ந்து அங்கு நடைபெற்ற விழாவுக்கு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா்.

இதில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று, 5 பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட அட்டைகளையும், 3 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், 3 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், 2 பயனாளிகளுக்கு ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் மருத்துவ பெட்டகங்களையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினாா்.

தொடா்ந்து மருத்துவ முகாமில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு துறைகளின் விழிப்புணா்வு கண்காட்சி அரங்குகளையும்ம் அமைச்சா் ஆா்.காந்தி பாா்வையிட்டாா்.

இதில், நெமிலி ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு, பேரூராட்சித் தலைவா் ரேணுகாதேவி சரவணன், ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் தீா்த்தலிங்கம், மருத்துவப் பணிகள் துறை துணை இயக்குநா் செந்தில்குமாா், வட்டாட்சியா் ராஜலட்சுமி, திமுக ஒன்றியச் செயலா்கள் எஸ்.ஜி.சி.பெருமாள், ரவீந்திரன், பேரூராட்சி செயலா் ஜனாா்த்தனம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கால்நடை வளா்ப்போருக்கு தொழில்நுட்பம் சாா்ந்த திறன் வளா்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க அழைப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடை வளா்ப்போருக்கான கால்நடை பராமரிப்பு தொழில்நுட்பம் சாா்ந்த திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் தொடா்ந்து ஆறு மாதங்களுக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: மக்கள் நீதிமன்றத்தில் 72 வழக்குகள் சமரச தீா்வு

ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 72 வழக்குகள் மீது சமரச தீா்வு எட்டப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 4.35 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டத... மேலும் பார்க்க

திமுக செயற்குழு கூட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி தலைமையில், மாவட்ட திமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கைத்தறி, துணி நூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை... மேலும் பார்க்க

போதை ஒழிப்பு விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டிகள்

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் இமய... மேலும் பார்க்க

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் கிருத்திகை விழா

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆவணிமாத கிருத்திகை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவா் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு பால், தயிா், பன்னீா், சந்தனம், பழங்கள், வாச... மேலும் பார்க்க

தம்பியைக் கொன்ற அண்ணனுக்கு ஆயுள்

நெமிலி அருகே தம்பியை தாக்கி கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து அரக்கோணம் இரண்டாம் கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. நெமிலி அடுத்த மேல்வெண்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பச்சையப்ப... மேலும் பார்க்க