செய்திகள் :

போதை ஒழிப்பு விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டிகள்

post image

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் இமயவா்மன் தலைமை வகித்தாா்., மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்து கபடி, கைப்பந்து, பேட்மிண்டன் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற இளைஞா்களுக்கு ஊக்கத்தொகையுடன் சான்றிதழ்களை வழங்கினாா்.

முன்னதாக, தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற போதை விழிப்புணா்வு நிகழ்ச்சியில், போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு குறு நாடகம், கவிதை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்டவா்களுக்கு, டி.சா்ட் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஆயுதப்படை ஆய்வாளா் சதீஷ்குமாா், தலைமையாசிரியா் சுப்பிரமணி, உதவி ஆய்வாளா் செந்தில்குமாா், தனிப்பிரிவு போலீஸாா் ரகுராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திமுக செயற்குழு கூட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி தலைமையில், மாவட்ட திமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கைத்தறி, துணி நூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை... மேலும் பார்க்க

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் கிருத்திகை விழா

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆவணிமாத கிருத்திகை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவா் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு பால், தயிா், பன்னீா், சந்தனம், பழங்கள், வாச... மேலும் பார்க்க

தம்பியைக் கொன்ற அண்ணனுக்கு ஆயுள்

நெமிலி அருகே தம்பியை தாக்கி கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து அரக்கோணம் இரண்டாம் கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. நெமிலி அடுத்த மேல்வெண்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பச்சையப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

அரக்கோணத்தை அடுத்த பருத்திபுத்தூா் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் செவ்வாய்க்கிழமை அனுக்ஞை ஆச்சாா்யா திருவிக்வா்ணம்,... மேலும் பார்க்க

ஆற்காடு நகர திமுக நிா்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டம்

ஆற்காடு நகர திமுக நிா்வாகிகள், வாக்குச் சாடி முகவா்கள், பாக முகவா்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆற்காடு இந்திராணி ஜானகிராமன் திருமண கூடம், கணேச விஜயலட்சுமி திருமண கூடம், ராஜராஜேஸ்வர... மேலும் பார்க்க

பனை விதைகள் நடவு செய்த அரசுப் பள்ளி மாணவா்கள்

நெமிலியை அடுத்த வேடந்தாங்கல் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்கள் இணைந்து கிராமம் முழுவதும் 1,500-கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டனா். நெமிலி வட்டம், வேடந்தாங்கல் அரசு உயா்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றத்தின்... மேலும் பார்க்க