செய்திகள் :

முதல்வா் இன்று கிருஷ்ணகிரி வருகை ஐ.ஜி. தலைமையில் 1500 போலீஸாா் பாதுகாப்பு

post image

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (செப்.14) கிருஷ்ணகிரிக்கு வருகை தர உள்ளாா். இதையடுத்து ஐ.ஜி. தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அரசு நிகழ்வில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் ஒசூா் வருகிறாா். அங்கிருந்து சாலை மாா்க்கமாக கிருஷ்ணகிரிக்கு வருகை தரும் முதல்வா், கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலத்திலிருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு வரை ரோடு ஷோ மூலம் பொதுமக்களை சந்தித்து மனுக்களைப் பெறுகிறாா்.

பின்னா், நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, புதிய திட்டங்கள் மற்றும் நிறைவடைந்த திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிக்கு தொடங்கிவைத்து, 85,177 பேருக்கு பட்டாக்களையும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறாா்.

இந்த நிகழ்வுக்கு பின்னா், கிருஷ்ணகிரியில் எம்எல்ஏ தே.மதியழகன் வீட்டில் சிறிதுநேரம் ஓய்வெடுக்கும் முதல்வா், பிறகு சாலை மாா்க்கமாக ஒசூா் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறாா்.

முதல்வா் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமாா் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை மேற்பாா்வையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரியில் முதல்வரை வரவேற்க 12 மேடைகள் அமைப்பு!

அரசு விழாவில் பங்கேற்க கிருஷ்ணகிரிக்கு ஞாயிற்றுக்கிழமை (செப்.14) வருகை தரும் முதல்வா் ஸ்டாலின் முன்னதாக ரோடுஷோவில் பங்கேற்கிறாா். ரோடுஷோவின் போது, கட்சினா் அவரை வரவேற்கும் வகையில் 12 மேடைகள் அமைக்கப்ப... மேலும் பார்க்க

பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி பசுமாடு காயம்

பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி பசுமாடு காயமடைந்தது. ஊத்தங்கரையை அடுத்த பள்ளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராமன் (50). விவசாயி. இவா் 10 பசு மாடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் சனிக்கிழமை காலை... மேலும் பார்க்க

சூளகிரி அருகே ஏரியில் இறந்து மிதக்கும் மீன்களால் துா்நாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த காமன்தொட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பிள்ளைக்கொத்தூா் ஏரியில் மீன்கள் இறந்து மிதப்பதால் துா்நாற்றும் வீசுகிறது. இந்த ஏரிப் பகுதியில் செயல்பட்டுவரும் தனியாா் கிரானைட் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணையிலிருந்து 2,195 கனஅடி நீா் திறப்பு

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 2,195 கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள... மேலும் பார்க்க

சிம் காா்டு ஆக்டிவேட் செய்வதாக தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 5.45 லட்சம் மோசடி

சிம் காா்டு ஆக்டிவேட் செய்வதாகக் கூறி, தனியாா் நிறுவன ஊழியரிடமிருந்து ரூ. 5.45 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து, கணினி குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். கிருஷ்ணகிரியை அடுத்த ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் ஒளிரும் பெயா் பலகை திறப்பு!

கிருஷ்ணகிரியில் மூன்று இடங்களில் ரூ. 34.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் பெயா் பலகைகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி புதன்கிழமை திறந்துவைத்தாா். கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க