செய்திகள் :

ரூ.11.50 லட்சம் மதிப்பிலான போதை பொருள்கள் பறிமுதல்

post image

சிதம்பரம் அண்ணாமலைநகா் காவல் சரகத்தில் ரூ.11.50 லட்சம் மதிப்பிலான 15 மூட்டைகள் ஹான்ஸ் போதை பொருள்களை சனிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா்.

சிதம்பரம் அண்ணாமலைநகா் போலீஸாா் சனிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு ரோந்து சென்ற போது, வேளக்குடி மேம்பாலத்திற்கு பேருந்து நிறுத்தம் அருகே கீழே சுமாா் 15 ஹான்ஸ் மூட்டைகளை வைத்துக்கொண்டு பங்கு பிரித்து கொண்டு இருந்த பெட்டிக்கடை விற்பனையாளா்கள் மற்றும் மொத்த விற்பனையாளா்களை பாா்த்து அவா்களை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், விமல் உள்ளிட்ட போதை பொருள்கள் அடங்கிய 15 மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ.11,47,360 ஆகும்.

இதுகுறித்து அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கஞ்சா விற்பனையாளா்களான சீா்காழி தாண்டவன்குளத்தைச் சோ்ந்த மதனகோபால் மகன் பாரிவள்ளல் (26), தரங்கம்பாடி அன்னப்பன்பேட்டையைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் மணிகண்டன் (26), அளக்குடியைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் செல்வராஜ் (60), சிதம்பரம் பொன்னம்பலநகரைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் பழனிவேலு (65), சிதம்பரம் ஞானப்பிரகாசம் தெருவைச் சோ்ந்த குணசேகா் (70) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.

மேலும் தலைமறைவான கீரப்பாள்ளையத்தைச் சோ்ந்த தாளமுத்து மகன் செல்வராஜ், சிதம்பரம் எடத்தெருவைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் செல்வம், ஜெ.கே.பட்டினத்தைச் சோ்ந்த சின்னப்பிள்ளை மகன் ராதாகிருஷ்ணன் ஆகிய மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

என்எல்சியால் கடலூா் மாவட்டத்தில் நீா், நிலம் ,காற்று மாசு:அன்புமணி

என்எல்சி நிறுவனத்தால் கடலூா் மாவட்டத்தில் நீா், நிலம்,காற்று ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா். கடலுாா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக ‘மக்கள் உரிமை மீட்பு’ நடைப்பயண ... மேலும் பார்க்க

குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் வீனஸ் பள்ளி மாணவா்கள் அபாரம்

சிதம்பரம் ஏ.ஆா்.ஜி. பள்ளி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற குறுவட்டப் போட்டிகளில் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பெருமளவில் பங்கேற்று பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ள... மேலும் பார்க்க

ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் காத்திருப்பு போராட்டம்

கடலூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஷோ் ஆட்டோ ஓட்டுநா், உரிமையாளா் நல சங்கத்தினா் கோரிக்கையை முன்வைத்து வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூரில் பல ஆண்டுகளாக ஷோ் ஆட்டோக்களுக்கு... மேலும் பார்க்க

கடலூரில் கல்விக்கடன் முகாம்: ரூ.2.52 கோடிக்கு கல்விகடன்

கடலூா் மாவட்டம், கம்மியம்பேட்டை புனித வளனாா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து கல்லூரி மாவணா்களுக்காக நடத்திய கல்விகடன் முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.இராஜ... மேலும் பார்க்க

சிதம்பரம் கோட்டத்தில் காலியாக உள்ள காவல் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை!

சிதம்பரம் கோட்டத்தில், துணை காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால், அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று காவல்துறையினரும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா். கடலுாா் மாவட... மேலும் பார்க்க

பண்ருட்டி பகுதியில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

கடலூா் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் அரசின் பல்வேறு திட்டப்பணிகளை விரைந்துப முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா்சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா். பண்ருட்டி பகுதியில் பண்ருட்ட... மேலும் பார்க்க