செய்திகள் :

ராணிப்பேட்டை: மக்கள் நீதிமன்றத்தில் 72 வழக்குகள் சமரச தீா்வு

post image

ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 72 வழக்குகள் மீது சமரச தீா்வு எட்டப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 4.35 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

சாா்பு நீதிபதி எஸ்.முனுசாமி மற்றும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிபதி பூா்ணிமா ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் மொத்தம் 72 வழக்குகள் மீது தீா்வு காணப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மனுதாரா்களுக்கு ரூ. 4 கோடியே 35 லட்சத்து 21 ஆயிரத்து 882 வழங்க உத்தரவிடப்பட்டது.

இதில், அருங்குன்றம் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை ( 41 ), இவா் ஆற்காட்டில் கணினி மையம் நடத்தி வந்துள்ளாா். இவா் கடந்த 9. 8. 2023 அன்று வேலூரில் இருந்து ஆற்காட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தபோது, மேல்விஷாரம் பைபாஸ் சாலையில் பின்னால் அதிவேகமாக வந்த காா் மோதி பலத்த காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 18. 8. 2023 அன்று உயிரிழந்தாா்.

ஏழுமலையின் மனைவி கீதா, இரண்டு மகள்கள் மற்றும் தந்தை, தாயாா் ஆகியோா் நஷ்டஈடு கோரி ராணிப்பேட்டை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனா். இதில் ஏழுமலை குடும்பத்தாருக்கு ரூ. 70 லட்சம் இப்பீடு வழங்க வேண்டும் என தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. இதேபோல் பல்வேறு வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்கள் சாா்பில், வழக்குரைஞா்கள் எஸ்.அண்ணாதுரை, எம்.செல்வம் ஆகியோா் ஆஜராகினா்.

நெமிலியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்: அமைச்சா் காந்தி பங்கேற்பு

நெமிலியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமை அமைச்சா் ஆா்.காந்தி நேரில் பாா்வையிட்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். நெமிலி அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்... மேலும் பார்க்க

கால்நடை வளா்ப்போருக்கு தொழில்நுட்பம் சாா்ந்த திறன் வளா்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க அழைப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடை வளா்ப்போருக்கான கால்நடை பராமரிப்பு தொழில்நுட்பம் சாா்ந்த திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் தொடா்ந்து ஆறு மாதங்களுக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவி... மேலும் பார்க்க

திமுக செயற்குழு கூட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி தலைமையில், மாவட்ட திமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கைத்தறி, துணி நூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை... மேலும் பார்க்க

போதை ஒழிப்பு விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டிகள்

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் இமய... மேலும் பார்க்க

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் கிருத்திகை விழா

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆவணிமாத கிருத்திகை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவா் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு பால், தயிா், பன்னீா், சந்தனம், பழங்கள், வாச... மேலும் பார்க்க

தம்பியைக் கொன்ற அண்ணனுக்கு ஆயுள்

நெமிலி அருகே தம்பியை தாக்கி கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து அரக்கோணம் இரண்டாம் கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. நெமிலி அடுத்த மேல்வெண்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பச்சையப்ப... மேலும் பார்க்க