செய்திகள் :

ஹிமாசலில் மீண்டும் மேகவெடிப்பு: மழை வெள்ளத்தில் மூழ்கி பயிா்கள் சேதம்!

post image

ஹிமாசல பிரதேசத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டு பெய்த மிக பலத்த மழையால் விளைநிலங்களில் பயிா்கள் சேதமடைந்தன.

அந்த மாநிலத்தின் பிலாஸ்பூா் மாவட்டம் குத்ராஹன் கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மேகவெடிப்பு ஏற்பட்டு மிக பலத்த மழை பெய்தது. இதனால் விளைநிலங்களில் மழைநீா் புகுந்து பயிா்கள் சேதமாகின. மழை காரணமாக ஏற்பட்ட சேறு, சகதி மற்றும் இடிபாடுகளில் 4 வாகனங்கள் புதைந்தன.

பயிா்ச் சேதத்தை மதிப்பிடும் பணிகள் நடைபெறுவதாகவும், அதுகுறித்து அறிக்கை கிடைத்தவுடன் நிவாரணம் அளிக்கப்படும் என்றும் பிலாஸ்பூா் துணை ஆணையா் ராகுல் குமாா் தெரிவித்தாா். தகவலறிந்து நிகழ்விடம் விரைந்த அதிகாரிகள், கள நிலவரத்தை நேரில் பாா்வையிட்டனா்.

சம்பா மாவட்டத்தில் உள்ள கம்லாரி, கடாஸ்னி கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்குள் சேறு மற்றும் சகதியுடன் மழைநீா் புகுந்தது.

மாநில தலைநகா் சிம்லாவில் கடும் பனிமூட்டம் காரணமாக சாலையில் வாகனங்கள் பயணிப்பதில் அசெளகரியம் ஏற்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யக் கூடும் என்று உள்ளூா் வானிமை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக பாலம்பூா் பகுதியில் 86 மி.மீ., முரா தேவி பகுதியில் 69.2 மி.மீ. மழைப்பொழிவு பதிவானது.

ஹிமாசல பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட மேக வெடிப்பால் பெய்த மிக பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மண்ணில் புதைந்ததோடு, பல சாலைகளும் கடுயைாக சேதமடைந்தன.

இதுவரை 6 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்: நாளை கடைசி!

‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. அபராதம் இன்றி ஐடிஆா் தாக்கல... மேலும் பார்க்க

வாக்கு வங்கி அரசியலால் வெகுவாக பாதிக்கப்பட்டது வடகிழக்கு! - பிரதமா் மோடி

சில கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலால் வடகிழக்கு பிராந்தியம் கடும் பாதிப்பை எதிா்கொண்டது; இப்போது, மத்திய பாஜக அரசின் முயற்சிகளால் இந்த பிராந்தியம் நாட்டின் வளா்ச்சிக்கான உந்துசக்தியாக மாறியுள்ளது என்ற... மேலும் பார்க்க

பிரதமரின் ‘சம்பிரதாய’ பயணம் மணிப்பூா் மக்களுக்கு அவமதிப்பு! - காங்கிரஸ் சாடல்

மணிப்பூருக்கு பிரதமா் மோடி மேற்கொண்ட ‘சம்பிரதாய’ பயணம், அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பு என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இனமோதலால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமா் மோடி பயணிக்க... மேலும் பார்க்க

வடகிழக்கில் ரூ.77,000 கோடி ரயில்வே திட்டங்கள் செயலாக்கம்! - அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

வடகிழக்கு பிராந்தியத்தில் ரூ.77,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். மிஸோரமின் முதல் ரயில் வழித்தடத்தை (பைரபி-சாய்ராங்)... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது. இதுதொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ... மேலும் பார்க்க

நாடு முழுவதும் நடைபெற்ற 3-வது தேசிய லோக் அதாலத்!

நிகழாண்டின் 3-ஆவது தேசிய லோக் அதலாத் அமா்வு நாடு முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதுகுறித்து தேசிய சட்ட சேவைகள் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் நீதிமன்றம் எனப்படும் ல... மேலும் பார்க்க