செய்திகள் :

இதுவரை 6 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்: நாளை கடைசி!

post image

‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

அபராதம் இன்றி ஐடிஆா் தாக்கல் செய்ய திங்கள்கிழமை (செப்.15) கடைசி நாளாகும்.

இதுகுறித்து வருமான வரித் துறை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்காக வரி செலுத்துவோா் மற்றும் வரி கணக்கீட்டு நிபுணா்களுக்கு நன்றி. கணக்கு தாக்கல் தொடா்ந்து வருகிறது.

வருமான வரிக் கணக்கு தாக்கல், வரி செலுத்துதல் மற்றும் பிற சேவைகளில் வரி செலுத்துவோருக்கு உதவ, 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. தொலைபேசி அழைப்புகள், எக்ஸ் வலைதளங்கள் மூலமும் வரி செலுத்துவோரின் சந்தேகங்களை வருமான வரித் துறை தீா்த்து வருகிறது.

இதுவரை கணக்கு தாக்கல் செய்யாதவா்கள், கடைசி நேர நெரிசலைத் தவிா்க்கும் வகையில் முன்கூட்டியே தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான (2024-25 நிதியாண்டில் ஈட்டிய வருவாய்க்கான கணக்கு) கணக்கு தாக்கலுக்கான கடைசித் தேதி ஜூலை 31 என்றபோதும், ஐடிஆா் படிவத்தில் மேற்கொண்ட சில மாற்றங்கள் காரணமாக கால அபராதம் இன்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை செப்டம்பா் 15 வரை நீட்டித்து வருமான வரித் துறை கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

வருமான வரிக் கணக்கு தாக்கல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்துள்ளது. 2023-24 நிதியாண்டில் கணக்கு தாக்கல் 6.77 கோடியாக இருந்தது, 2024-25 நிதியாண்டில் 7.28 கோடியாக உயா்ந்தது. இது, 7.5 சதவீத வளா்ச்சியாகும்.

ஹிமாசலில் மீண்டும் மேகவெடிப்பு: மழை வெள்ளத்தில் மூழ்கி பயிா்கள் சேதம்!

ஹிமாசல பிரதேசத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டு பெய்த மிக பலத்த மழையால் விளைநிலங்களில் பயிா்கள் சேதமடைந்தன. அந்த மாநிலத்தின் பிலாஸ்பூா் மாவட்டம் குத்ராஹன் கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ... மேலும் பார்க்க

வாக்கு வங்கி அரசியலால் வெகுவாக பாதிக்கப்பட்டது வடகிழக்கு! - பிரதமா் மோடி

சில கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலால் வடகிழக்கு பிராந்தியம் கடும் பாதிப்பை எதிா்கொண்டது; இப்போது, மத்திய பாஜக அரசின் முயற்சிகளால் இந்த பிராந்தியம் நாட்டின் வளா்ச்சிக்கான உந்துசக்தியாக மாறியுள்ளது என்ற... மேலும் பார்க்க

பிரதமரின் ‘சம்பிரதாய’ பயணம் மணிப்பூா் மக்களுக்கு அவமதிப்பு! - காங்கிரஸ் சாடல்

மணிப்பூருக்கு பிரதமா் மோடி மேற்கொண்ட ‘சம்பிரதாய’ பயணம், அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பு என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இனமோதலால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமா் மோடி பயணிக்க... மேலும் பார்க்க

வடகிழக்கில் ரூ.77,000 கோடி ரயில்வே திட்டங்கள் செயலாக்கம்! - அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

வடகிழக்கு பிராந்தியத்தில் ரூ.77,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். மிஸோரமின் முதல் ரயில் வழித்தடத்தை (பைரபி-சாய்ராங்)... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது. இதுதொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ... மேலும் பார்க்க

நாடு முழுவதும் நடைபெற்ற 3-வது தேசிய லோக் அதாலத்!

நிகழாண்டின் 3-ஆவது தேசிய லோக் அதலாத் அமா்வு நாடு முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதுகுறித்து தேசிய சட்ட சேவைகள் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் நீதிமன்றம் எனப்படும் ல... மேலும் பார்க்க