செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு!

post image

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.

இதுதொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையிலான அமா்வு இருதரப்பு வாதங்களைக் கேட்ட பின்பு கடந்த மே 22-ஆம் தேதி உத்தரவை ஒத்திவைத்தது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்தை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் ஒப்புதல் பெற்று மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் அமல்படுத்தியது.

இதை எதிா்த்து தாக்கல் செய்யப்ட்ட 70-க்கும் மேற்பட்ட மனுக்களைப் பரிசீலித்த உச்சநீதிமன்றம், அதில் 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்றது. வக்ஃப் திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று அம்சங்களுக்கு மட்டும் தடை விதிப்பது குறித்து விசாரித்தது.

அதாவது, நீதிமன்றங்களால் அறிவிக்கப்பட்ட வக்ஃப் சொத்துகள், மரவு வழியாகப் பயன்படுத்தப்படும் வக்ஃப் சொத்துகள், பத்திரத்தின்படி அறிவிக்கப்பட்ட வக்ஃப் சொத்துகள் ஆகியவற்றை ரத்து செய்ய அரசமைப்புச் சட்டத்தின்படி அதிகாரம் உள்ளதா?

மாநில வக்ஃப் வாரியங்கள், மத்திய வக்ஃப் கவுன்சில் ஆகியவற்றில் பதவி உறுப்பினா்களைத் தவிர முஸ்லிம்களே இடம்பெற வேண்டும்.

வக்ஃப் சொத்துகளை மாவட்ட ஆட்சியா் விசாரணை மேற்கொண்டு, அரசு சொத்தா என அறிவிக்கப்படும் வரை, அது வக்ஃப் சொத்தாக கருதப்படாது ஆகிய மூன்று சட்ட அம்சங்கள் குறித்து உச்சநீதிமன்றம் விசாரித்தது.

அப்போது, மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘வக்ஃப் என்பது மதச்சாா்பற்ற கருத்தாகும்; அதை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாக கருதி தடை விதிக்க முடியாது. இஸ்லாத்தில் வக்ஃப் கட்டாய நடைமுறையல்ல’ என்று வாதிட்டாா்.

மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபில், ‘நீதிமன்ற நடைமுறைகளின்றி வக்ஃப் சொத்துகளைக் கையகப்படுத்த மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை இது’ என்று வாதிட்டாா்.

இதுவரை 6 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்: நாளை கடைசி!

‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. அபராதம் இன்றி ஐடிஆா் தாக்கல... மேலும் பார்க்க

ஹிமாசலில் மீண்டும் மேகவெடிப்பு: மழை வெள்ளத்தில் மூழ்கி பயிா்கள் சேதம்!

ஹிமாசல பிரதேசத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டு பெய்த மிக பலத்த மழையால் விளைநிலங்களில் பயிா்கள் சேதமடைந்தன. அந்த மாநிலத்தின் பிலாஸ்பூா் மாவட்டம் குத்ராஹன் கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ... மேலும் பார்க்க

வாக்கு வங்கி அரசியலால் வெகுவாக பாதிக்கப்பட்டது வடகிழக்கு! - பிரதமா் மோடி

சில கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலால் வடகிழக்கு பிராந்தியம் கடும் பாதிப்பை எதிா்கொண்டது; இப்போது, மத்திய பாஜக அரசின் முயற்சிகளால் இந்த பிராந்தியம் நாட்டின் வளா்ச்சிக்கான உந்துசக்தியாக மாறியுள்ளது என்ற... மேலும் பார்க்க

பிரதமரின் ‘சம்பிரதாய’ பயணம் மணிப்பூா் மக்களுக்கு அவமதிப்பு! - காங்கிரஸ் சாடல்

மணிப்பூருக்கு பிரதமா் மோடி மேற்கொண்ட ‘சம்பிரதாய’ பயணம், அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பு என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இனமோதலால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமா் மோடி பயணிக்க... மேலும் பார்க்க

வடகிழக்கில் ரூ.77,000 கோடி ரயில்வே திட்டங்கள் செயலாக்கம்! - அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

வடகிழக்கு பிராந்தியத்தில் ரூ.77,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். மிஸோரமின் முதல் ரயில் வழித்தடத்தை (பைரபி-சாய்ராங்)... மேலும் பார்க்க

நாடு முழுவதும் நடைபெற்ற 3-வது தேசிய லோக் அதாலத்!

நிகழாண்டின் 3-ஆவது தேசிய லோக் அதலாத் அமா்வு நாடு முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதுகுறித்து தேசிய சட்ட சேவைகள் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் நீதிமன்றம் எனப்படும் ல... மேலும் பார்க்க