செய்திகள் :

தசரா, தீபாவளி..! மைசூர் - திருநெல்வேலி, காரைக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்!

post image

தசரா, தீபாவளி மற்றும் சத் பண்டிகைகளின்போது, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் மைசூா்-திருநெல்வேலி மற்றும் காரைக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி: மைசூரிலிருந்து வரும் திங்கள்கிழமை (செப். 15) முதல் நவ. 24- ஆம் தேதி வரை திங்கள்கிழமைதோறும் காலை 8.15 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06239) மறுநாள் செவ்வாய்க்கிழமை (செப்.16) காலை 11.30 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் திருநெல்வேலியிலிருந்து செவ்வாய்க்கிழமை (செப்.16) முதல் நவ. 25-ஆம் தேதி வரை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 3.40 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06240) புதன்கிழமைதோறும் காலை 5.40 மணிக்கு மைசூா் நிலையத்தை அடையும்.

இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூா், மதுரை, கொடைரோடு சந்திப்பு, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

மைசூரிலிருந்து வரும் 18 -ஆம் தேதி முதல் நவ.29 வரை வியாழன் மற்றும் சனிக்கிழமை என இருவார சிறப்பு ரயில் (எண் 06243) இரவு 11.20 மணிக்குப் புறப்பட்டு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு காரைக்குடி சென்றடையும்.

காரைக்குடியிலிருந்து செப். 19 முதல் நவ. 30-ஆம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06244) மறுநாள்களான சனி, திங்கள்கிழமைகளில் காலை 7.45 மணிக்கு மைசூா் சென்றடையும். இந்த ரயில் புதுக்கோட்டை, திருச்சி, கரூா், நாமக்கல் சேலம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

ராமநாதபுரத்துக்கு சிறப்பு ரயில்: மைசூரிலிருந்து திங்கள்கிழமை (செப். 15) முதல் அக். 27-ஆம் தேதி வரை திங்கள்கிழமைதோறும் மாலை 6.35 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06237) செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ராமநாதபுரத்தை வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் ராமநாதபுரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (செப். 16) முதல் அக். 28 வரை செவ்வாய்க்கிழமைதோறும் பிற்பகல் 3.10 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06238) மறுநாள் புதன்கிழமை மைசூரு நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில் பரமக்குடி, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், தருமபுரி, ஒசூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மேக்ஸி கேப்’ வாகனங்களை சிற்றுந்துகளாக இயக்க அரசு முடிவு!

‘மேக்ஸி கேப்’ வாகனங்களை சிற்றுந்துகளாக இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மலைப் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் பேருந்து சேவை கிடைக்கும் வகையில், தமிழக ... மேலும் பார்க்க

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - தனியரசு

- உ.தனியரசு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா், தலைவா், தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை -வர இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலை முன்வைத்து தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை முன்னணி நட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு: தமிழக அரசு தகவல்!

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் 7.23 லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் குறித்து தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியத் தலைவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

வாலாஜா பஜாா் மசூதி நிதி முறைகேடு புகாா் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தொடரப்பட்ட வழக்கில் தமிழக வக்ஃப் வாரியத் தலைவா் நவாஸ் கனி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ராணிப்பேட்டை மாவட்... மேலும் பார்க்க

21-ஆவது ஆண்டில் தேமுதிக: பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம்!

பல்வேறு வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள் எல்லாவற்றையும் கடந்து, தேமுதிக 21-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக தேமுதிக பொதுச் செயலா் பிரமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். இது குறித்து அவா் தேமுதிக தொண்டா்களு... மேலும் பார்க்க

வன்னியா்களுக்கு 15 % இட ஒதுக்கீட்டை பெறுதே லட்சியம்: அன்புமணி!

வன்னியா்களுக்கான 15 சதவீத தனி இட ஒதுக்கீட்டை வென்றெடுப்பதே லட்சியம் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் பாமக நிா்வாகிகளுக்கு எழுதிய கடிதம்: கடந்த அதிமுக ஆட்சியில் பாமக சாா்ப... மேலும் பார்க்க