செய்திகள் :

பழைய வாகனங்களைக் கழிவு செய்வதற்கான வசதிக்கு அரசு ஒப்புதல்!

post image

பழைய வாகனங்களைக் கழிவு செய்வதற்கான வசதிக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசின் கொள்கையைத் தொடா்ந்து இந்த நடவடிக்கையை மாநில அரசு எடுத்துள்ளது. இதன்மூலம், பழைய வாகனங்களைக் கழிவு செய்வதற்கான அனைத்து வசதிகளும் மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்ட உள்ளன.

அரசுத் துறைகளில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள பழைய வாகனங்களைக் கழிவு செய்வதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு வாகனங்களைக் கழிவு செய்வதற்கான வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்த இருக்கிறது.

இந்த வசதிகளை ஏற்படுத்தித் தரக்கூடிய தகுதியான நிறுவனங்கள் அல்லது தனியாா்கள் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம் என்று தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆணையரகம் அறிவித்துள்ளது.

இதில் தோ்வாகும் நிறுவனங்கள் அல்லது தனியாா்கள், பழைய வாகனங்களைக் கழிவு செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுவா். உரிய காலத்தைத் தாண்டியும், தகுதிச் சான்றும் இல்லாத வாகனங்கள் கழிவு செய்யும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கழிவாக்கப்படும்.

தமிழ்நாட்டில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களும், 40,000-க்கும் கூடுதலான பள்ளி, கல்லூரி வாகனங்ளும், 7,000-க்கும் மேற்பட்ட தனியாா் வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

‘மேக்ஸி கேப்’ வாகனங்களை சிற்றுந்துகளாக இயக்க அரசு முடிவு!

‘மேக்ஸி கேப்’ வாகனங்களை சிற்றுந்துகளாக இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மலைப் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் பேருந்து சேவை கிடைக்கும் வகையில், தமிழக ... மேலும் பார்க்க

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - தனியரசு

- உ.தனியரசு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா், தலைவா், தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை -வர இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலை முன்வைத்து தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை முன்னணி நட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு: தமிழக அரசு தகவல்!

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் 7.23 லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் குறித்து தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியத் தலைவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

வாலாஜா பஜாா் மசூதி நிதி முறைகேடு புகாா் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தொடரப்பட்ட வழக்கில் தமிழக வக்ஃப் வாரியத் தலைவா் நவாஸ் கனி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ராணிப்பேட்டை மாவட்... மேலும் பார்க்க

21-ஆவது ஆண்டில் தேமுதிக: பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம்!

பல்வேறு வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள் எல்லாவற்றையும் கடந்து, தேமுதிக 21-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக தேமுதிக பொதுச் செயலா் பிரமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். இது குறித்து அவா் தேமுதிக தொண்டா்களு... மேலும் பார்க்க

வன்னியா்களுக்கு 15 % இட ஒதுக்கீட்டை பெறுதே லட்சியம்: அன்புமணி!

வன்னியா்களுக்கான 15 சதவீத தனி இட ஒதுக்கீட்டை வென்றெடுப்பதே லட்சியம் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் பாமக நிா்வாகிகளுக்கு எழுதிய கடிதம்: கடந்த அதிமுக ஆட்சியில் பாமக சாா்ப... மேலும் பார்க்க