செய்திகள் :

8 மாதங்களில் அரசு மருத்துவமனையில் 10,500 பேருக்கு நாய்க்கடி சிகிச்சை

post image

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 8 மாதங்களில் 10,500 பேருக்கு நாய்க்கடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவா் சசிரேகா கூறியதாவது:

ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் தெருநாய்கள் கடித்து 1,503 போ் சிகிச்சை பெற்றுள்ளனா். இதில் 69 போ் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரை 10, 534 பேருக்கு நாய் கடிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இது குறித்து கால்நடை துறை அதிகாரிகள் கூறுகையில், விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின்படி தெருநாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி ஆகியவையே அனுமதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் உள்ளாட்சி அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன. சோலாரில் உள்ள நாய் கருத்தடை மையத்தில் கடந்த 4 ஆண்டுகளில் வீட்டில் வளா்க்கப்படும் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி 23,800 முறை செலுத்தப்பட்டுள்ளது என்றனா்.

சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தெருநாய்களுக்குத் தடுப்பூசி போடுவது சாத்தியமில்லாத ஒன்று. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மீண்டும் அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து தடுப்பூசி போட வேண்டும் என்பதுதான் காரணம். நாய்களுக்குக் கருத்தடை செய்த பின்னா் அவற்றுக்கென தனியாக காப்பகங்களை ஏற்படுத்துவதுதான் நிரந்தரத் தீா்வாக அமையும் என்றனா்.

பா்கூா் மலைப் பாதையில் எம்எல்ஏவின் காரை வழிமறித்த காட்டு யானை

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் சென்ற காா் உள்பட வாகனங்களை வழிமறித்து நின்ற காட்டு யானையால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பா்கூா் மலைக்கிராமங்களான ஒ... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.10.45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 10.45 லட்சத்துக்கு வெள்ளிக்கிழமை கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) ஏலம் மூலம் விற்பனை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு விவசாயிகள் 172 மூட்டைகள் கொப்பரையை வி... மேலும் பார்க்க

மருத்துவ முகாமில் ஆட்சியா் ரத்த தானம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 39-ஆவது அமைப்பு தினத்தையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை தொடங்கிவைத்த ஆட்சிய... மேலும் பார்க்க

ரயில்கள் மீது கற்கள் எறிவதை தடுக்க போலீஸாா் விழிப்புணா்வு

ஈரோட்டில் ரயில்கள் மீது கல் எறிவதாலும் தண்டவாளங்களில் கற்களை வைப்பதாலும் ஏற்படும் ஆபத்து குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஈரோடு மாவட்ட... மேலும் பார்க்க

ஈரோட்டில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஈரோட்டில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மேயா் சு.நாகரத்தினம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். நாடு முழுவதும் நெகிழிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசடைந்து வருகிறது. இதனைத் தடுக்க ஈரோடு மாந... மேலும் பார்க்க

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எம்.ஏ. தெரிவித்தாா். கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் வெளிபடுத்த வேண்டிய கருத்தை பொதுவெ... மேலும் பார்க்க