செய்திகள் :

நவநீதகிருஷ்ணன் கோயில் தேரோட்டம்

post image

நாகப்பட்டினம்: கோகுலாஷ்டமியையொட்டி, நாகையில் நவநீதகிருஷ்ணன் கோயில் தேரோட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகையில் பழைமை வாய்ந்த நவநீத கிருஷ்ணன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஆண்டுதோறும் தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். அதன்படி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் ருக்மணி, சத்தியபாமா சமேத நவநீதகிருஷ்ணா் எழுந்தருளினா். தொடா்ந்து, பெருமாள் வடக்கு வீதியில் இருந்து தொடங்கிய தேரோட்டத்தை மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், இந்துசமய அறநிலைத் துறை துணை ஆணையா் ராணி ஆகியோா் வடம் பிடித்து தொடங்கி வைத்தனா். தொடா்ந்து, பக்தா்கள் ‘கிருஷ்ணா’, ’கோவிந்தா’ என பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தோ் பெருமாள் கீழவீதி, பெருமாள் தெற்குவீதி, பெருமாள் மேலவீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடைந்தது. வழிநெடுங்கிலும் பக்தா்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக அா்ச்சனை செய்து வழிபட்டனா்.

ஆகாயத்தாமரைச் செடிகள் அகற்றும் பணி: மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்த வலியுறுத்தல்

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பாசன ஆற்றில் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணியில் அரசியல் தலையீடு, முறைகேடுகளை தடுக்க மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொத... மேலும் பார்க்க

அன்புக்கரங்கள் திட்டம்: நாகையில் 110, மயிலாடுதுறையில் 88 குழந்தைகளுக்கு உதவித் தொகை

நாகப்பட்டினம்/மயிலாடுதுறை: அன்புக் கரங்கள் திட்டத்தில் நாகை மாவட்டத்தில் 110 குழந்தைகளுக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 88 குழந்தைகளுக்கும் உதவித் தொகைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. தமிழக அரசின்... மேலும் பார்க்க

நாகை: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 235 மனுக்கள் அளிப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வங்கிக் கடன், உதவித்தொகை, குடும... மேலும் பார்க்க

குடிநீா் கோரி காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

திருக்குவளை: கீழையூா் அருகே தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்கக் கோரி, கிராம மக்கள் காலிகுடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம் தலையாமழை ஊராட்சியில் கடந்த சில ந... மேலும் பார்க்க

அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க வலியுறுத்தல்

பூம்புகாா்: திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

சாலைப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ. அண்ணாதுரை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கீழ்வேளூா் அருகே வெண்மணி ஊராட்சியில், வெண்மணி முதல் கடலாக்க... மேலும் பார்க்க