பஞ்சாபில் மழை வெள்ளத்தால் பாதிப்பட்டவா்களுக்கு உடனடி நிவாரணம்: ராகுல் வலியுறுத்த...
ஆகாயத்தாமரைச் செடிகள் அகற்றும் பணி: மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்த வலியுறுத்தல்
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பாசன ஆற்றில் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணியில் அரசியல் தலையீடு, முறைகேடுகளை தடுக்க மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தினாா்.
வாய்மேடு - தென்னடாா் பகுதியில் முள்ளியாற்றில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை நீா்ப்பாசனத் துறை சாா்பில் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா்
பி.ஆா். பாண்டியன் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு, செய்தியாளா்களிடம் கூறியது:
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடல் முகத்துவார பாசன ஆறுகள், கால்வாய்கள், வடிகால்களில் ஆகாயத் தாமரைச் செடிகள் அடா்ந்து புதா் போல மண்டி, நீரோட்டத்திற்கு தடை ஏற்படுத்தியுள்ளது. இதனை அகற்றக் கோரி கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நாகை மாவட்டத்திற்கு ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன்.
இந்த நிதியை கொண்டு முழுமையாக அகற்றுவதற்கு முன்வர வேண்டும். அரசியல் தலையீடின்றியும், முறைகேடுகள் இன்றியும், விவசாயிகள் பங்கேற்புடன் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் உறுதிப்படுத்த முன் வர வேண்டும் என்றாா்.
சங்கத்தின் மாநில துணைச் செயலாளா் எம். செந்தில்குமாா், நாகை மாவட்ட பொறுப்பு செயலாளா் கருணைநாதன், திருவாரூா் மாவட்டச் செயலாளா் குடவாசல் சரவணன், வேதாரண்யம் ஒன்றியச் செயலாளா் ரவி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.