செய்திகள் :

குடிநீா் கோரி காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

post image

திருக்குவளை: கீழையூா் அருகே தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்கக் கோரி, கிராம மக்கள் காலிகுடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம் தலையாமழை ஊராட்சியில் கடந்த சில நாள்களாக குடிநீா் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தலையாமழை ஊராட்சியில் தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.இதில் கிராம மக்கள் பங்கேற்று அரசுப் பேருந்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிா்வாகக் குழு உறுப்பினா் டி. கண்ணையன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் டி. செல்வம் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

இதில், கட்சியின் ஒன்றியச் செயலாளா் வீ. எஸ். மாசேதுங், ஒன்றிய துணைச் செயலாளா் ஜி. சங்கா், ஒன்றிய பொருளாளா் எம். பா்ணபாஸ், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் வீ. சுப்பிரமணியன், இந்திய தேசிய மாதா் சம்மேளன ஒன்றியச் செயலாளா் எம். பாப்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தகவலறிந்த கீழ்வேளூா் வட்டாட்சியா் கவிதாஸ் மற்றும் போலீஸாா், நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குடிநீா் பிரச்னைக்கு உடனடியாக தீா்வுகாணப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, சாலை மறியலை விலக்கிக் கொண்டனா்.

இந்த மறியலால் தலையாமழை பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆகாயத்தாமரைச் செடிகள் அகற்றும் பணி: மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்த வலியுறுத்தல்

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பாசன ஆற்றில் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணியில் அரசியல் தலையீடு, முறைகேடுகளை தடுக்க மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொத... மேலும் பார்க்க

அன்புக்கரங்கள் திட்டம்: நாகையில் 110, மயிலாடுதுறையில் 88 குழந்தைகளுக்கு உதவித் தொகை

நாகப்பட்டினம்/மயிலாடுதுறை: அன்புக் கரங்கள் திட்டத்தில் நாகை மாவட்டத்தில் 110 குழந்தைகளுக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 88 குழந்தைகளுக்கும் உதவித் தொகைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. தமிழக அரசின்... மேலும் பார்க்க

நாகை: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 235 மனுக்கள் அளிப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வங்கிக் கடன், உதவித்தொகை, குடும... மேலும் பார்க்க

அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க வலியுறுத்தல்

பூம்புகாா்: திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

நவநீதகிருஷ்ணன் கோயில் தேரோட்டம்

நாகப்பட்டினம்: கோகுலாஷ்டமியையொட்டி, நாகையில் நவநீதகிருஷ்ணன் கோயில் தேரோட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகையில் பழைமை வாய்ந்த நவநீத கிருஷ்ணன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஆண... மேலும் பார்க்க

சாலைப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ. அண்ணாதுரை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கீழ்வேளூா் அருகே வெண்மணி ஊராட்சியில், வெண்மணி முதல் கடலாக்க... மேலும் பார்க்க