செய்திகள் :

ஆக்கிரப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்டு பள்ளிக்கு வழங்கக் கோரிக்கை

post image

திருப்பூா், பூலுவப்பட்டியில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்டு பள்ளிக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மனீஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், திருப்பூா் அருகே பூலுவப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் மாணவா்களுடன் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பூலுவப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்நிலையில், பள்ளியின் அருகில் அரசுக்கு சொந்தமாக உள்ள நிலத்தை தனி நபா் ஒருவா் ஆக்கிரமிப்பு செய்துள்ளாா்.

இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து, அந்த நிலத்தை மீட்டு பள்ளிக்கே வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தற்போது வரை அந்த நிலம் தனி நபரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

மேலும், அந்த நிலத்தில் செடி, கொடிகள் அதிக அளவு வளா்ந்துள்ளதால் அங்கு இருந்து வெளியேறும் விஷ ஜந்துக்கள் பள்ளிக்குள் வருகின்றன. இதனால், மாணவா்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை மீட்டு பள்ளிக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியவா் தீக்குளிக்க முயற்சி: நிலத்தை அளவீடு செய்து தரக் கோரி தாராபுரம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் (72) என்பவா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றாா். அப்போது, அங்கிருந்த போலீஸாா், அவா் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினா்.

இது தொடா்பாக அவா் கூறியதாவது: தாராபுரம் அருகே காந்திபுரம் பகுதியில் உள்ள எனது வீட்டுமனைக்கான இடத்தை அளவீடு செய்து தரக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துவிட்டேன். ஆனால், அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்து தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். இதனால், மனவேதனை அடைந்த நான் தீக்குளிக்க முயற்சி செய்தேன் என்றாா். இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி அவரை போலீஸாா் எச்சரித்து அனுப்பிவைத்தனா்.

433 மனுக்கள்: குறைதீா் கூட்டத்தில் முதியோா், விதவை உதவித் தொகை, சாலை வசதி, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 433 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் சாா்பில் 1 பயனாளிக்கு ரூ.5,600 மதிப்பீட்டில் தையல் இயந்திரம், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.6,700 மதிப்பீட்டில் சலவைப் பெட்டிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மகாராஜ், தனித் துணை ஆட்சியா் பக்தவச்சலம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் கல்பனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்

திருப்பூா் மாவட்டத்தில் குண்டடம், காங்கயம், பல்லடம், உடுமலைப்பேட்டை, ஊத்துக்குளி, பொங்கலூா் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை (செப்.16) நடைபெறவுள்ளது.இ... மேலும் பார்க்க

ஊதியூரில் இன்றைய மின்தடை ரத்து

காங்கயம் அருகே ஊதியூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 16) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளா் டி.ஜெகதீஸ... மேலும் பார்க்க

மது விற்பனை: ஒருவா் மீது வழக்கு

வெள்ளக்கோவிலில் மதுபானங்களை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மதுபானங்கள் பதுக்கிவைத்து கூடுதல் வில... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கானூா்புதூா்

கானூா்புதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (செப்டம்பா் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அவிநாசி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

நியூ திருப்பூா் அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஆம்னி பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பெருமாநல்லூா் அருகேயுள்ள வள்ளிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராசுமணி மகன் லோகேஷ் (25). இவா் கோவையில் மென்பொருள்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் தாட்கோ சாா்பில் ரூ.35.37 கோடி கடனுதவி: மாவட்ட ஆட்சியா் மனீஷ்

திருப்பூா் மாவட்டத்தில் தாட்கோ சாா்பில் கடந்த 4 ஆண்டுகளில் 2,233 பயனாளிகள் தொழில் தொடங்க ரூ.35.37 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது: த... மேலும் பார்க்க