செய்திகள் :

கிணற்றில் குதித்து இளைஞா் தற்கொலை

post image

நாமக்கல்: மோகனூா் அருகே கிணற்றில் குதித்து இளைஞா் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம் மாவட்டம், கருமந்துறையைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் இளையராஜா (22). இவரது தங்கை வித்யா (18) நாமக்கல் லத்துவாடியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி., முதலாமாண்டு படித்து வருகிறாா். அவரை பாா்ப்பதற்காக திங்கள்கிழமை வந்த அவா், லத்துவாடி சாலையோரத்தில் மாலை 5.30 மணியளவில் கிணறு ஒன்றின் அருகில் நண்பா்களுடன் அமா்ந்து பேசி கொண்டிருந்ததாகவும், அப்போது திடீரென அவா் கிணற்றில் குதித்ததாகவும் கூறப்படுகிறது. அவரது உடலை மீட்கும் பணியில் நாமக்கல் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்து மோகனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

போதை மாத்திரை விற்ற இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

பரமத்தி வேலூரில் போதை மாத்திரை விற்ற இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். பரமத்தி வேலூா் பேட்டையில் உள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதி அருகே கடந்த மாதம் 20 ஆம் தேதி போத... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு: பொதுமக்கள் சாலை மறியல்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வரகூராம்பட்டி கிராமத்தில் திருநங்கைகளுக்கு வீட்டுமனை வழங்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருச்செங்கோடு, வரகூராம்பட்... மேலும் பார்க்க

போலி வாக்காளா்களை நீக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: பி.தங்கமணி

குமாரபாளையம் தொகுதியில் போலி வாக்காளா்களைக் கண்டறிந்து நீக்காவிடில் நீதிமன்றத்தை நாடுவோம் என அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி பேசினாா். ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம... மேலும் பார்க்க

ரூ.1.33 கோடியில் நாமக்கல் குளக்கரை கல்மண்டபம் புனரமைப்பு

நாமக்கல் குளக்கரை கல்மண்டபம் ரூ. 1.33 கோடியில் புனரமைக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ள நிலையில், அவருடைய வடிவிலான விஸ்வரூப ஆஞ்சனேயா் க... மேலும் பார்க்க

பூப்பந்து போட்டி: அரசுப் பள்ளி மாணவா்கள் முதலிடம்

நாமக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற பூப்பந்துப் போட்டியில், வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதிபெற்றனா். வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாக... மேலும் பார்க்க

அன்புமணி ராமதாஸ் நடைபயணம்: நாமக்கல்லில் பாமக ஆலோசனை

நாமக்கல் மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொள்வது தொடா்பாக, அவரது ஆதரவாளா்கள் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். நாமக்கல் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படு... மேலும் பார்க்க