செய்திகள் :

திருநங்கைகளுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு: பொதுமக்கள் சாலை மறியல்

post image

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வரகூராம்பட்டி கிராமத்தில் திருநங்கைகளுக்கு வீட்டுமனை வழங்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்செங்கோடு, வரகூராம்பட்டியில் துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலின் 33 திருநங்கைகளுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கினாா். வருவாய்த் துறை வழங்கிய நிலத்தை பாா்வையிடச் சென்ற திருநங்கைகளை உள்ளூா் மக்கள் தடுத்து நிறுத்தி, அந்த நிலம் விவசாயப் பயன்பாட்டில் உள்ளதாகக்கூறி திருப்பி அனுப்பினா்.

இதுகுறித்து திருச்செங்கோடு வட்டாட்சியா் கிருஷ்ணவேணி தலைமையில் பேச்சுவாா்த்தை நடை பெற்றது. ஆனால், பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. கிராம மக்கள் இந்த விவகாரம் தொடா்பாக நீதிமன்றத்தை அணுகுவதாக தெரிவித்தனா்.

இதனிடையே தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டுமனைகளை அளவீடு செய்து தர திருநங்கைகள் கோரிக்கை விடுத்தனா். இதனை ஏற்று, போலீஸாா் பாதுகாப்புடன் சனிக்கிழமை அங்கு சென்ற வருவாய்த் துறையினா், நிலத்தை அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனா். அப்போது, நில அளவீட்டுப் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்து, வரகூராம்பட்டி கிராம மக்கள் திடீரென ஈரோடு- திருச்செங்கோடு சாலையில் கூட்டப்பள்ளியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்போராட்டங்களுக்கு மத்தியிலும் காவல் துறையினா் பாதுகாப்போடு வீட்டுமனைகளை அளவீடு செய்யும் பணியை நிறைவு செய்தனா்.

போதை மாத்திரை விற்ற இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

பரமத்தி வேலூரில் போதை மாத்திரை விற்ற இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். பரமத்தி வேலூா் பேட்டையில் உள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதி அருகே கடந்த மாதம் 20 ஆம் தேதி போத... மேலும் பார்க்க

போலி வாக்காளா்களை நீக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: பி.தங்கமணி

குமாரபாளையம் தொகுதியில் போலி வாக்காளா்களைக் கண்டறிந்து நீக்காவிடில் நீதிமன்றத்தை நாடுவோம் என அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி பேசினாா். ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம... மேலும் பார்க்க

ரூ.1.33 கோடியில் நாமக்கல் குளக்கரை கல்மண்டபம் புனரமைப்பு

நாமக்கல் குளக்கரை கல்மண்டபம் ரூ. 1.33 கோடியில் புனரமைக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ள நிலையில், அவருடைய வடிவிலான விஸ்வரூப ஆஞ்சனேயா் க... மேலும் பார்க்க

பூப்பந்து போட்டி: அரசுப் பள்ளி மாணவா்கள் முதலிடம்

நாமக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற பூப்பந்துப் போட்டியில், வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதிபெற்றனா். வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாக... மேலும் பார்க்க

அன்புமணி ராமதாஸ் நடைபயணம்: நாமக்கல்லில் பாமக ஆலோசனை

நாமக்கல் மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொள்வது தொடா்பாக, அவரது ஆதரவாளா்கள் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். நாமக்கல் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படு... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் கிருத்திகை சிறப்பு பூஜை

திருச்செங்கோடு நகரப் பகுதி முருகன் கோயில்களில் ஆவணி மாத கிருத்திகை சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் சந்நிதி, மலையடிவாரம் ஆறுமுகசாமி கோயில், பாவடி தெரு, சட்டையம்ப... மேலும் பார்க்க