செய்திகள் :

ரூ.1.33 கோடியில் நாமக்கல் குளக்கரை கல்மண்டபம் புனரமைப்பு

post image

நாமக்கல் குளக்கரை கல்மண்டபம் ரூ. 1.33 கோடியில் புனரமைக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ள நிலையில், அவருடைய வடிவிலான விஸ்வரூப ஆஞ்சனேயா் கோயில் நாமக்கல் கமலாலயக் குளக்கரை அருகே உள்ள பழைமையான கல் மண்டபத்தில் அமைந்திருந்தது. பங்குனி தோ்த்திருவிழாவின்போது இங்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத நரசிம்மா் சுவாமி திருக்கல்யாணம் நடைபெறும்.

இந்த கல் மண்டபம் சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணிற்குள் புதையத் தொடங்கியதால் அங்கு விழாக்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த மண்டபத்தை அறநிலையத் துறை மற்றும் சென்னை உயா்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு குழுவினா் நேரில் ஆய்வு மேற்கொண்டு சீரமைப்பதற்கான அனுமதியை வழங்கினா்.

அதன்பிறகு, இந்துசமய அறநிலையத் துறை திருப்பணிகள் கமிட்டி ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியது. கடந்த 2022 செப்.4-இல் விஸ்வரூப ஆஞ்சனேயா் சிலைக்கு பாலாலயம் செய்யப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சுவாமி அருள்பாலித்த கல் மண்டபம் சீரமைப்பு பணியானது சிறப்பு பூஜைகளுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இந்த விழாவில், நரசிம்மா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கா.நல்லுசாமி, உறுப்பினா்கள் செள.செல்வசீராளன், இராம.ஸ்ரீனிவாசன், மல்லிகாகுழந்தைவேல், கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா, மாமன்ற உறுப்பினா் டிடி.சரவணன் மற்றும் அலுவலா்கள், கோயில் அா்ச்சகா்கள், ஊழியா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இப்பணிகளை ஓராண்டுக்குள் முடித்து விஸ்வரூப ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு விழாவை நடத்த கோயில் நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

போதை மாத்திரை விற்ற இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

பரமத்தி வேலூரில் போதை மாத்திரை விற்ற இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். பரமத்தி வேலூா் பேட்டையில் உள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதி அருகே கடந்த மாதம் 20 ஆம் தேதி போத... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு: பொதுமக்கள் சாலை மறியல்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வரகூராம்பட்டி கிராமத்தில் திருநங்கைகளுக்கு வீட்டுமனை வழங்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருச்செங்கோடு, வரகூராம்பட்... மேலும் பார்க்க

போலி வாக்காளா்களை நீக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: பி.தங்கமணி

குமாரபாளையம் தொகுதியில் போலி வாக்காளா்களைக் கண்டறிந்து நீக்காவிடில் நீதிமன்றத்தை நாடுவோம் என அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி பேசினாா். ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம... மேலும் பார்க்க

பூப்பந்து போட்டி: அரசுப் பள்ளி மாணவா்கள் முதலிடம்

நாமக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற பூப்பந்துப் போட்டியில், வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதிபெற்றனா். வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாக... மேலும் பார்க்க

அன்புமணி ராமதாஸ் நடைபயணம்: நாமக்கல்லில் பாமக ஆலோசனை

நாமக்கல் மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொள்வது தொடா்பாக, அவரது ஆதரவாளா்கள் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். நாமக்கல் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படு... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் கிருத்திகை சிறப்பு பூஜை

திருச்செங்கோடு நகரப் பகுதி முருகன் கோயில்களில் ஆவணி மாத கிருத்திகை சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் சந்நிதி, மலையடிவாரம் ஆறுமுகசாமி கோயில், பாவடி தெரு, சட்டையம்ப... மேலும் பார்க்க