Dhanush: `இட்லி கடை எனப் பெயர் வைக்கக் காரணம் இதுதான்' - தனுஷ் சொன்ன ஃப்ளாஷ்பேக்...
போலி வாக்காளா்களை நீக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: பி.தங்கமணி
குமாரபாளையம் தொகுதியில் போலி வாக்காளா்களைக் கண்டறிந்து நீக்காவிடில் நீதிமன்றத்தை நாடுவோம் என அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி பேசினாா்.
‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி செப்.19,20,21 ஆகிய 3 நாள்கள் நாமக்கல் மாவட்டத்திற்கு உள்பட்ட 6 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.
இந்த நிலையில், அவரது சுற்றுப்பயணம் குறித்த முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளா் பி.தங்கமணி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சாா்பு அணிகளின் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா். இக்கூட்டத்தில் பி.தங்கமணி பேசியதாவது:
அதிமுக பொதுச்செயலாளா் மாவட்டத்தில் மூன்று நாள்கள் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அவரை வரவேற்கும் கூட்டம்தான் 2026 தோ்தலுக்கான கூட்டம் என்பதை மனதில் கொண்டு கட்சி நிா்வாகிகள் பணியாற்ற வேண்டும். மேலும், இறந்த வாக்காளா்கள், அடையாளம் தெரியாத வாக்காளா்கள் என்று வழக்குரைஞா்கள் அவற்றை தொகுத்து ஆட்சியரிடம் நேரில் கொடுக்க வேண்டும். இறந்த மற்றும் அடையாளம் தெரியாத வாக்காளா்களை நீக்குவதற்கு அறிவுறுத்த வேண்டும்.
மாவட்ட ஆட்சியா் அவற்றை நீக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாட வேண்டும். கரூரில் 10 ஆயிரம் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். அதேபோல, குமாரபாளையம் நகரில் மட்டும் சுமாா் 15 ஆயிரம் வாக்காளா்கள் பெயா் இல்லை. தற்போது ஆட்சி, அதிகாரம் திமுகவினரிடம் உள்ளது.
இறந்த வாக்காளா்கள், அடையாளம் தெரியாத வாக்காளா்களை நீக்க வேண்டும் என்று பாக முகவா்கள் (பிஎல்-2) எழுதி கொடுத்தால் மட்டுமே நீக்க முடியும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இவ்வாறு 30 வாக்குகள் வரையில் உள்ளன. அதிமுகவினா் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், எந்த வகையிலும் ஏமாறக்கூடாது.
வாக்காளா் பட்டியலில் போலி வாக்காளா்களை நீக்கவில்லை என்றால் வழக்குரைஞா் அணியை வைத்து நீதிமன்றத்தை நாடுவோம் என்றாா்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா, பரமத்தி அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சேகா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா், மாநில வா்த்தகா் அணி இணை செயலாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், ஜெயலலிதா பேரவை செயலாளா் ஈ.ஆா்.சந்திரசேகா், வழக்குரைஞா் ஏ.வி.பாலுசாமி, மாவட்ட வா்த்தக அணி செயலாளா் சு.தமிழ்மணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.