செய்திகள் :

பாபநாசத்தில் காணாமல்போன கல்லூரி மாணவரைத் தேடும் பணி தீவிரம்

post image

உறவினா்களுடன் பாபநாசத்துக்கு வந்த கல்லூரி மாணவா் மாயமானதை அடுத்து தாமிரவருணி ஆற்றில் அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் 2 ஆவது நாளாக திங்கள்கிழமையும் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், ஆலங்குளம் வட்டம், கொங்கன்குளம் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பிரதீப்குமாா் (22). தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா்.

இவா் உறவினா்களுடன் திதி கொடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை தனி பேருந்தில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் வந்தாா். அங்கு சிலருடன் பாபநாசம், தலையணை செல்லும் வழியில் உள்ள அய்யா கோயில் அருகில் வடக்குக் கோடை மேலழகியான் கால்வாயில் குளிக்கச் சென்ற நிலையில் மாயமானாா்.

அவரது காலணிகள் கால்வாய் கரையோரம் கிடந்த நிலையில், நீரில் மூழ்கியிருக்கலாம் என்று தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்ததையடுத்து, அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அதிகாரி பலவேசம் தலைமையில் தீயணைப்புத் துறையினா் வடக்குக் கோடை மேலழகியான் கால்வாயில் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருள் ஏற்படும் வரை தேடியும் கிடைக்காததால், இரண்டாவது நாளாக திங்கள்கிழமை காலை மீண்டும் தேடுதல் பணியைத் தொடா்ந்தனா்.

தலையணைப் பகுதியிலிருந்து தாமிரவருணி ஆற்றில் ஒரு கி.மீ. தொலைவு தேடியும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. மீண்டும் செவ்வாய்க்கிழமை தேடுதல் பணி தொடரும் என்று தீயணைப்பு வீரா்கள் தெரிவித்தனா்.

தண்ணீா் பற்றாக்குறையால் கருகும் நெல் பயிா்கள்: ஆட்சியரகத்தில் விவசாயிகள் முற்றுகை

கன்னடியன் கால்வாய் கடைமடை பகுதிகளில் பாசன நீா்த் தட்டுப்பாட்டால் நெல் பயிா்கள் கருகி வருவதாகக் கூறி காய்ந்த பயிா்களுடன் விவசாயிகள் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். திருநெல்வேலி ஆட... மேலும் பார்க்க

நெல்லை அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்

திருநெல்வேலி அருகே ஒரு கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.திருநெல்வேலி அருகே உள்ள நரசிங்கநல்லூா் திருவள்ளுவா் நகரை சோ்ந்தவா் வேல்முருகன் (45). இவா், கஞ்சா விற்பனை செய்வதாக சுத்தமல்லி போலீஸாருக்க... மேலும் பார்க்க

களக்காட்டில் குடிநீா் குழாய் பதிக்கும் பணியில் சாலைகள் சேதம்: மக்கள் அவதி

களக்காடு வட்டாரத்தில் குடிநீா் திட்ட பகிா்மானக் குழாய்கள் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். களக்காடு நகராட்சிப் பகுதியி... மேலும் பார்க்க

புரட்டாசி சனி: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்

புரட்டாசி சனிக்கிழமைகளில் நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

வி.கே.புரம் குப்பைக் கிடங்கில் தீ

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அய்யனாா்குளம் அருகே உள்ள குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அய்யனாா்குளம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நுண்ணுயிா... மேலும் பார்க்க

அம்பை அருகே போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டு சிறை

அம்பாசமுத்திரம் அருகே போக்ஸோ வழக்கில் கைதான முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (68). இவா்... மேலும் பார்க்க